கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்குடா சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டல்குடா பாடசாலை சந்தியில் தனியார் பயணிகள் பஸ் வண்டி முச்சக்கர வண்டியுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.
விபத்தில் உயிரிழந்த கல்பிட்டியைச் சேர்ந்த முஹம்மது சேக்காலி ரெஜீனா பீவி (வயது 53) என்ற நான்கு பிள்ளைகளின் தாயான பெண் தனது மருமகனுடன் அவரது முச்சக்கரவண்டியில் மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை கண்டல்குடா பிரதேச வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இவ்வேளை நீர்கொழும்பிலிருந்து கல்பிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் மற்றொரு பஸ்ஸூக்கு வழிவிடுவதற்காக முற்பட்டுள்ளதுடன் வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டபோது முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த உயிரிழந்த பெண் மற்றும் அவரது மருமகன் ஆகிய இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கல்பிட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் படுகாயத்திற்குள்ளான பெண் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மேலதிகச் சிகிச்சைக்காக கல்பிட்டி வைத்தியசாலையிலிருந்து புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச்சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கல்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்பிட்டி பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM