எதிர்வரும் ஜனவரி மாதம் 14,15 ஆம் திகதிகளில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அந் நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மரியா ஸகரோவா தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உறவுகள், அரசியல் உரையாடலை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள், வர்த்தக-பொருளாதார, மனிதாபிமான மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பது, அத்துடன் இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் சட்ட அடிப்படையை விரிவாக்குவது குறித்து கவனம் செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM