வவுனியா,போகஸ்வெவ இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாயை தாக்கி அவரது துப்பாக்கியை பறித்துச் சென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் வவுனியா நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா போகஸ்வெவ இராணுவ முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய், நேற்று (25.12.2019) அதிகாலை பணி முடிந்து சென்று கொண்டிருந்த போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவரது துப்பாக்கி பறித்து செல்லப்பட்டிருந்தது.
காயமடைந்த இராணுவ சிப்பாய் அநுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், போகஸ்வெவ பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில், கெக்கிராவ பகுதியில் இருந்து குறித்த துப்பாக்கி இராணுவ பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும், இராணுவ முகாமில் பணியாற்றும் மற்றொரு சிப்பாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த இருவரும் போகஸ்வெவ பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன் போது சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு தை மாதம் 09 திகதி வரையில் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM