யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகரில் வணிக நிலையம் ஒன்று தீ விபத்துக்குள்ளாகியதில் அங்கிருந்த 2 கோடி ரூபா பெறுமதியான மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
சாவகச்சேரி ஏ-9 வீதியில் உள்ள வணிக நிலையத்தில் இந்தத் தீ விபத்து இன்று மாலை ஏற்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த மோட்டார் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தில் மின்சார இணைப்பில் ஏற்பட்ட ஒழுக்கே தீ விபத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் விசாரணைகளின் பின்னரே காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பொதுமக்களுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் இணைந்தனர். யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அருகில் உள்ள பாதணிகள் விற்பனை நிலையத்துக்கும் தீ பரவியது. எனினும் சுமார் 35 நிமிடங்களில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM