(நா.தனுஜா)
'வெள்ளை வேன்' விவகாரம் என்பது நேற்றோ அல்லது அதற்கு முன்னைய நாளோ பேசுபொருளான விடயமொன்றல்ல. இவ்விடயம் தொடர்பில் கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எமது சமூகத்தில் உள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
அவ்வாறிருக்கையில் அதுகுறித்து இருவர் சில வெளிப்படுத்தல்களைச் செய்யும்போது அவை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர, அந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ராஜித சேனாரத்னவை சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்ய முயற்சிப்பது ஏற்புடையதன்று.
இத்தகைய செயற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டனம் செய்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
'வெள்ளை வேன்' விவகாரம் என்பது நேற்றோ அல்லது அதற்கு முன்னைய நாளோ பேசுபொருளான விடயமல்ல. இவ்விடயம் தொடர்பில் கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எமது சமூகத்தில் உள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
வெள்ளை வேன் என்று கூறினாலும் கூட, அதன் பின்னணியின் என்ன கதை இருக்கிறது என்பதையும் அறிந்திருக்கிறார்கள்.
அவ்வாறிருக்க இருவர் வந்து நாங்கள் தான் வெள்ளை வேனின் சாரதிகள் என்றும், அவ்விவகாரம் தொடர்பில் நன்கு அறிவோம் என்றும் கூறும்பட்சத்தில் அதுகுறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அவர்கள் கூறுவது உண்மையா? பொய்யா? அத்தகைய சம்பவங்கள் எங்கு நடைபெற்றது? அவற்றுக்கு வேறு சாட்சிகள் உள்ளதா? என்று ஆராயப்பட வேண்டும். உண்மையில் கடந்த காலத்தில் 'வெள்ளை வேன் கடத்தல்' சம்பவங்கள் நடைபெற்றன என்று எம்மனைவருக்கும் தெரியும். உதாரணத்திற்கு நானே இத்தகைய சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் பலவற்றில் சட்டத்தரணியாக ஆஜராகியிருக்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM