(எஸ்.ஜே.பிரசாத்)
14ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 தங்கப்பதக்கங்களை வென்றெடுப்பதே எமது அடுத்த இலக்கு என்றும், அதற்கான தயார்ப்படுத்தல்களில் முதலில் பயிற்சியாளர்கள் குறித்த கவனம் செலுத்தப்படவுள்ளதாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிக்க முத்துகல தெரிவித்தார்.
அத்தோடு இதற்காக 50 மில்லியன் ரூபா பணத்தை கருவூலத்திடம் கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேபாளத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை 40 தங்கப்பதக்கங்களை வென்றது.
இந்நிலையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு 14 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றெடுக்க தமது இலக்கை நிர்ணயித்துள்ளது.
நடைபெற்று முடிந்த தெற்காசிய விளையாட்டு விழா குறித்தும் எதிர்கால இலக்கு குறித்தும் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதில் பேசிய விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிக்க முத்துகல,
அடுத்த தெற்காசிய விளையாட்டு விழாப் போட்டிகளில் 100 தங்கப்பதக்கங்களை வென்றெடுப்பதே எமது அடுத்த இலக்காக உள்ளது. அதற்கு வீர, வீராங்கனைகளுக்கு முதலாவதாக சிறந்த பயிற்சியாளர்களை நாம் நியமிக்க வேண்டும். அதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம். அத்தோடு தற்போது நமது வீர, வீராங்கனைகளுக்கு பயிற்சியளித்து வரும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் குறித்தும் மீள்பரிசீலனை செய்யப்படும்.
கடந்த முறை நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை கரப்பந்தாட்ட அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது. ஆனால் இம்முறை வெளிநாட்டு பயிற்சியாளரின் கீழ் பங்கேற்ற இலங்கை கரப்பந்தாட்ட அணி பெரிதாக சோபிக்கவில்லை. அதனால் பயிற்சியாளர்கள் குறித்து நாம் கவனம் செலுத்தவுள்ளோம்.
அதனால் வீரர்களுக்கு முன்னதாக நாம் பயிற்சியாளர்களை தயார்ப்படுத்த வேண்டும். அவர்களுக்கு பயிற்சியளிக்கவேண்டும். வெளிநாட்டு பயிற்சியாளரை கொண்டு வந்து நம்நாட்டு பயிற்சியாளர்களை மேம்படுத்தவும், எமது பயிற்சியாளர்களை வெளிநாடுகளுக்கு தயார்ப்படுத்தவும் நாம் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதற்காக கருவூலத்திடமிருந்து 50 மில்லியன் ரூபா பணத்தை கோரியுள்ளோம்.
இவ்வாறு நாம் தயாராகாவிட்டால் 100 தங்கப்பதக்கங்களை வெல்லும் இலக்கை அடைய முடியாது என்று தம்மிக்க முத்துகல தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM