இந்தியாவிலேயே முதல் முறையாக உத்திரபிரதேசத்தில் மூன்றாம் பாலினத்தவருக்காகப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் கல்வி உட்பட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனாலும், அனைத்து தடைகளையும் தாண்டி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதித்த வண்ணம் உள்ளனர்.
கல்வித் துறையைப் பொருத்தவரை மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று தனியாகப் பள்ளிகளோ, கல்லூரிகளோ, பல்கலைக்கழகங்களோ இந்தியாவில் இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனால் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர போதிய வாய்ப்புகள் கிடைக்காமலிருந்து வருகிறது.
இந்நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக உத்தரப் பிரதேசம் மாநிலம் குஷிநகரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கென பிரத்யேகமாக ஒரு பல்கலைக்கழகமே தொடங்கப்படவுள்ளது.
அகில இந்திய மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கல்வி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்படவுள்ள இந்த பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பிலிருந்து முதுகலை பட்டப்படிப்பு வரை வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. பி.எச்.டி. எனப்படும் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு படிப்புகளும் இந்த பல்கலைக்கழகத்தில் பயிலலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினவர்த்தவர்களால் வளர்க்கப்பட்ட இரண்டு குழந்தைகள் வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி இங்கு அனுமதிக்கப்படுவார்கள். பெப்ரவரி, மார்ச் மாதவாக்கில் இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என இந்த அறக்கட்டளையின் தலைவர் கிருஷ்ண மோகன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM