(நா.தனுஜா)
2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற விபத்துச் சம்பவமொன்றுக்காக கைதுசெய்யப்பட்ட நேற்றுமுன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் தலைவருமான சம்பிக்க ரணவக்க இன்றைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத அனுஷ்ட்டான நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க,
2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றியடைந்தது. எமது ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த 9 தேரர்கள் ஊடாகவே அவர்களுக்குப் பெரும்பான்மையைப் பெறமுடிந்தது.
அவ்வேளையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக்குவதற்கே தீர்மானித்திருந்தார்கள். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குமாறு ஜாதிக ஹெல உறுமயவின் 9 தேரர்களும், நாங்களும் குரல்கொடுத்தது மாத்திரமன்றி, அதுகுறித்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வேண்டுகோளையும் முன்வைத்தோம். அதற்காக நாட்டுமக்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம்.
அதேபோன்று 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்ற வேகத்துடன் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்லிலும் அவர்கள் வெற்றியடைவதற்காக மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து நாமும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காகவும் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM