இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அண்ட்ரோய்ட் செயலியை பயன்படுத்தி வரும் பயனாளர்களை உடனடியாக டுவிட்டர் செயலியை புதுப்பிக்குமாறு (update) வலியுறுத்தியுள்ளது.
டுவிட்டர் கணக்குகளை கட்டுப்படுத்தவும், தனிப்பட்ட தரவை அணுகவும் ஹெக்கர்களைத் தடுப்பதற்காகவே டுவிட்டர் பயனாளர்களை தங்கள் ட்விட்டர் அண்ட்ரோய்ட் செயலியை புதுப்பிக்குமாறு (update) இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஹெக்கர்கள் உள்ளே நுழைய உதவும் பாதுகாப்பு பிரச்சினையை அடையாளம் கண்ட பின்னர் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே மெத்யூ தெரிவித்துள்ளார்.
எனவே, அண்ட்ரோய்ட் டுவிட்டர் பயனாளர்கள் தங்களது டுவிட்டர் கணக்குகளைப் பாதுகாக்க விரைவில் புதுப்பிக்கப்பட்ட டுவிட்டர் செயலியை கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து தங்களது தற்போதைய டுவிட்டர் பயன்பாடுகளுக்கு பதிவிறக்கம் செய்யுமாறு கோரியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், ட்விட்டர் ஐ.ஒ.எஸ். செயலியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டுவிட்டர் அண்ட்ரோய்ட் செயலியில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் செலுத்தப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த குறியீடுகள் உலகம் முழுக்க ட்விட்டர் அண்ட்ரோய்ட் செயலியை பயன்படுத்துவோரின் விவரங்களை கசியவிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
"இருப்பினும், அதிகாரப்பூர்வ டுவிட்டர் உதவி மையம், ஒரு பிழையைக் கண்டுபிடித்ததாக டுவீட் செய்துள்ளது, இது அனிமேஷன் செய்யப்பட்ட பிஎன்ஜி கோப்புகளைப் பயன்படுத்தி ஒரு டுவீட்டில் பல அனிமேஷன் படங்களை சேர்க்க அனுமதிக்கிறது," என்று கூறியுள்ளது. "அனிமேஷன் போர்ட்டபிள் நெட்வொர்க் கிராபிக்ஸ் (APNG)) கோப்புகள் எங்கள் பாதுகாப்புகளைப் புறக்கணிக்கின்றன, மேலும் பயன்பாட்டிற்கும் உங்கள் சாதனத்திற்கும் செயல்திறன் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இன்று நாங்கள் பிழையை சரிசெய்கிறோம், இது டுவீட் செய்யும்போது எ.பி.என்.ஜி களை உயிரூட்ட அனுமதிக்காது" என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.
டுவிட்டரில் பதிவேற்றப்பட்ட ஏற்கனவே உள்ள APNG கோப்புகள் அகற்றப்படாது, மேலும் உங்களுக்கும் உங்கள் டுவிட்டர் அனுபவத்திற்கும் சிறந்த ஒத்த அம்சத்தை உருவாக்குவது குறித்து எங்கள் குழுக்கள் ஆராயும். அனிமேஷன் செய்யப்பட்ட பி.என்.ஜி கோப்புகளைப் பயன்படுத்தி ஒரு டுவீட்டில் பல அனிமேஷன் படங்களைச் சேர்க்க உங்களை அனுமதிக்கும் பிழை சமீபத்தில் கண்டறியப்பட்ட பிழை என்று உதவி மையம் கூறியது. எ.பி.என்.ஜி கள் எங்கள் பாதுகாப்புகளை புறக்கணிக்கின்றன, மேலும் பயன்பாடு மற்றும் உங்கள் சாதனத்திற்கான செயல்திறன் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், உதவி மையம் பிழையை சரிசெய்ய முடிந்தது, இது டுவீட் செய்யும்போது எ.பி.என்.ஜி களை உயிரூட்ட அனுமதிக்காது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM