வலிமேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வீதி ஒழுங்கைப் பேணி நடக்க வேண்டும் என வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் த.நடனேந்திரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வீதி ஒழுங்கைப் பேணி நடக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. வியாபார நிலையங்களிற்கு முன்னால் பாதசாரிகளின் போக்குவரத்திற்கு இடையூறாக பொருட்களை வெளியே வைத்து விற்பனை செய்வது காட்சிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது அவற்றை அனுசரித்து நடக்குமாறு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அறியத்தருகின்றேன் எனத் தெரிவித்தார்.
(தெல்லிப்பழை)
வலிதென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வியாபாரம் தொழில் முயற்சிகளை மேற்கொள்வோர் 2020 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும் என வலிதென்மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் அ.ஜெபநேசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபையின் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சூழல் பாதுகாப்பு சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் அடிப்படையில் வலிதென்மேற்கு பிரதேசசபையின் நிர்வாகப் பிரதேசத்தில் விதந்துரைக்கப்பட்ட வியாபாரம் அல்லது தொழில்களுக்கு சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்கப்படுகின்ற பொறுப்பு எமது சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் வலிதென்மேற்கு பிரதேசசபையின் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தினை பெற்றுக் கொள்ளவும் ஏற்கனவே உரிமத்தினைப் பெற்றுக் கொண்டவர்கள் உரிமம் கலாவதியாகியிருப்பின் அதனைப் புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
வலுவிலுள்ள சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் இல்லாமல் மேற்குறிப்பிடப்பட்ட தொழில்களை மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு தண்டப்பணமும் அறவிடப்படும் எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM