கேரள கஞ்சாவினை தம்வசம் உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை (24.12.2019) குறித்த வழக்கு மாவட்ட நீதிபதியும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிபதியுமான பயாஸ் றஸாக் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார்.
கல்முனைகுடி பகுதியில் உள்ள தைக்கா வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞன் கைதாகி இருந்தார். கைதாகிய குறித்த இளைஞனின் வாக்குமூலத்தினை அடிப்படையாக கொண்டு அப்பகுதி வீடு ஒன்றில் கேரளா கஞ்சாவினை தராசில் அளவீடு செய்த இரு பெண்கள் கைதாகி இருந்தனர்.
இதில் இரு பெண்களும் மன்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறாக ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரான பாத்திமா சுமையா என்பவரை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
கடந்த காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் கேரள கஞ்சாவினை தராசில் அளவீடு செய்த இரு பெண்களிடம் இருந்து சுமார் 7 கிலோ கஞ்சாவினை பொலிஸார் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM