பொலிஸ் பக்கசார்பாக செயற்பட்டாலும் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட்டுள்ளது : அஜித் பி பெரேரா 

Published By: R. Kalaichelvan

24 Dec, 2019 | 03:02 PM
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்கவின் கைது விவகாரத்தில் பொலிஸார் பக்க சார்பாக செயற்பட்டிருந்தாலும் 19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் எம்மால் சுயாதீனப்படுத்தப்பட்ட நீதித்துறையின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்கவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அஜித் பி பெரேரா தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

இந்த அரசாங்கம் பிணை முறி மோசடிக்காரர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கும் தண்டனை பெற்றுக் கொடுப்பதாகக் கூறியே ஆட்சியை கைபற்றியது. ஆனால் அவற்றுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காது சிங்கள பௌத்த தலைவர் ஒருவரையே முதலில் சிறையிலடைத்தது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நீதித்துறை மற்றும் பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றை சுயாதீனப்படுத்தியிருந்தோம். அவ்வாறிருந்த போதிலும் இந்த விடயத்தில் பொலிஸார் பக்க சார்பாக நடந்து கொண்டாலும் நீதித்துறை மீது எமக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வீண் போகாதவாறு இன்று நீதித்துறை சுயாதீனமாகச் செயற்பட்டிருக்கிறது. நீதித்துறையானது அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்ல. நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் உரித்துடையதாகும். 

கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் விசாரணைகள் இடம்பெற்று முடிந்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க சிறையிலடைக்கப்பட்டமை முற்று முழுதான அரசியல் பழிவாங்கலாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50