சுதேச கலைகளினதும் கலைஞர்களினதும் மேம்பாட்டிற்காகத் தனது பதவிக்காலத்தில் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உறுதியளித்தார். எமது பாரம்பரியங்களையும் நாட்டின் கலாச்சாரம் மற்றும் தனித்துவத்தைப் பாதுகாக்கும் கொள்கையில் அதற்காகத் திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கலைஞர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கலைஞர்களுக்கு எதிர்காலத்தில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கலைஞர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ரன்மினித்தென்ன சினிமா கிராமம் கடந்த காலங்களில் உரியப் பிரயோசனம் பெறப்படாது கைவிடப்பட்டிருந்தது. சுதேச கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக அதிலிருந்து பயன்பெறுமாறு ஜனாதிபதி கலைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பல்வேறு நிறுவனங்களில் தொழில்வாய்ப்புகளுக்காக ஆட்களைத் தெரிவு செய்யும்போது கலைஞர்களுக்கும் சந்தர்ப்பமளிக்கப்பட்டிருப்பது அவர்களது சேவைகளை மதிக்கும் வகையிலேயே ஆகுமென்றும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முன்னணி கலைஞர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM