(இராஜதுரை ஹஷான்)
அரசியல் பழிவாங்கலை இலக்காகக் கொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு சுயாதீன நீதிமன்றம் சரியான நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது.
சர்வாதிகார ரீதியில் அதிகாரத்தை பிரயோகித்து ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்க முடியாது என பாரர்ளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
விகாரமாதேவி பூங்கா வளாகத்தில் இன்று மாலை இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களின் மதவழிபாடு நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் பாரளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட அரசியல் பழிவாங்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதனை ஜனநாயக ரீதியில் நிறைவுக்குக்கொண்டு வருவது அவசியமாகும்.
வீதி விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நாளை விடுதலை செய்வார் என்று அதிகளவில் எதிர்பார்த்துள்ளோம். சுயாதீனப்படுத்தப்பட்ட நீதித்துறை ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் தலைதூக்கும் போது சரியான தீர்வினை வழங்கியது. அதன் தொடர்ச்சி இன்று இடம்பெறும்.
சட்டவிரோதமான முறையில் இடம்பெற்ற கைது மற்றும் அரசியல் பழிவாங்கலுக்கு சட்டமார்க்கத்தின் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். அரசியல் ரீதியான செயற்பாடுகள் மாறுபட்டதாக காணப்படலாம். ஆனால் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான குரல் ஒன்றாகவே காணப்பட வேண்டும்.
கடந்த வருடம் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து ஜனநாயகத்திற்காக போராடினோம். இன்று மீண்டும் ஜனநாயகத்தின் இருப்பு குறித்து சவால் எழுந்துள்ளன.
ஜனநாயகத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கு எழுகின்ற அமைதிவழி போராட்டத்தை ஒன்றுப்படுத்தி ஜனநாயகத்தை பாதுகாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM