(எம்.ஆர்.எம்.வஸீம்)
வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவடைந்து செல்கின்றது. பொதுத்தேர்தலுக்கு முன்னர் புதிய கட்சிகள் உருவாக வாய்ப்பிருக்கின்றது. அதனால் வடக்கு கிழக்குக்கு தேசிய மட்டத்தில் முன்னுரிமை வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
அதன் மூலமே அந்த மக்களின் உள்ளங்களை வெற்றிகொள்ள முடியும் என இலங்கை கம்யூனிஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.
சோசலிச மககள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணத்தில் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமிழந்து புதிய கட்சிகள் தேர்தலுக்கு முன்னர் உருவாக இருக்கின்றன.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வடக்கில் எங்களுக்கு 5வீத வாக்குகளும் கிழக்கில் 22வீத வாக்குகளுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துக்கொண்டு சும்மா இருந்துவிட முடியாது. வடக்கு கிழக்குக்கு தேசிய மட்டத்தில் முன்னுரிமை வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலமே அந்த மக்களின் உள்ளங்களை வெற்றிகொள்ள முடியும்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்ப்பாகவே செயற்பட்டு வருகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் மேற்கொண்ட பிரசாரங்கள் தற்போது பொய்பித்து வருகின்றன.
அதனால் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக இருந்துவந்த நம்பிக்கை குறைவடைந்து வருகின்றது. அதன் விளைவாகவே அங்கு புதிய கட்சிகள் உருவாகவேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவருகின்றன.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளவேண்டிய பல வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. விசேடமாக பெரும்பாலான மக்கள் வறுமை நிலையில் இருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் பல்வேறு காரணங்களில் விதவைகளான 65ஆயிரம் விதவைகள் இருப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்திருக்கின்றார். இது கவனம் செலுத்தப்படாமல் இருக்கும் விடயமாகும்.
அத்துடன் தற்போது இடம்பெறும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் தேவையற்ற கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். இவர்களில் சலர் மேற்கொள்ளும் நடவடிக்கையால் இல்லாத பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பிக்கின்றன. குறிப்பாக ஊழல் மோசடி தொடர்பான சட்ட நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொள்ளும்போது அதுதொடர்பாக எமது உறுப்பினர்கள் தேவையற்ற முறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முற்படுகின்றனர்.
இவ்வாறு கருத்து தெரிவிக்க முற்படுபவர்களில் அதிகமானவர்களுக்கு ஊழல் மோசடி குற்றச்சாட்டு இருக்கின்றது. அதனால் ஊழல் மோசடி குற்றச்சாட்டு இருப்பவர்கள் தங்கள் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலையாகும்வரை இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். இவர்களின் நடவடிக்கையால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களும் பல்வேறு அசெளகரியங்களுக்கு ஆளாகின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM