ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்தி, தமி ழர்களின் பாதுகாப்பையும் நலனையும் பேணுவதற்கு இன்னும் காலம் பிந்திவிடவில்லை என்று பிரிட்டனின் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கட்சியின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுகமான நீதியசரர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொன்சர் வேட்டிவ் கட்சியைச் சோந்த பிரதமர் பொறிஸ் ஜோன்ச னின் தேர்தல் வெற்றியை ஒட்டி அவருக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அண்மைய தேர்தலில் வென் றமைக்கு எமது வாழ்த்துக்கள்.
தங்களின் கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த முன்னைய பிரதமர் டேவிட் கமரூன் கடைசியாக இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவரைச் சந்திக்கும் அதிர்ஷ்டம் கிட்டியது. மிக விரை வில் வடக்கு மாகாணத்துக்கு உங்கள் விஜயமும் இடம்பெறுகின்றமையையும் எதிர்பார்த்து இருக்கின்றோம்.
பிரிட்டனில் வாழும் தமிழர்க ளின் உயர்ந்த நண்பர் நீங்கள் என்பது நாடறிந்த விடயம். இலங் கையிலும் பிரிட்டனிலும் உள்ள தமிழர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளமையுடன் உங்க ளிடமிருந்து அதிகம் எதிர்பார்க் கின்றனர்.
எங்கள் மக்கள் தங்கள் பாரம் பரிய பூமியில் இடம்பெறும் அரச அடக்குமுறை, இராணுவ ஆக்கிர மிப்பு, சிங்களக்குடியேற்றங்கள் போன்றவற்றாலும் அவற்றின் விளைவுகளினாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு அல்லல்பட்டு வரு கின்றனர்.
இலங்கையில் இனப்பிரச்சி னையைத் தீர்த்து, மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்டும் வர லாற்றுப் பொறுப்பு பிரிட்டனுக்கு உண்டு.
பிரிட்டனின் காலனித்துவ நாடாக்கப்பட்டவற்றுள் இலங்கை யும் ஒன்று. 1833இல் இங்கு பிரிட்டனால் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மாற்றங்களே இலங்கையில் இனப்பூசல்கள் ஏற்படக் கார ணம் என்பது பொதுவாக நம்பப் படுகின்றது.
அந்தக் காலம் வரை தனி நாடாக இருந்த வடக்கும் கிழக்கும், எஞ்சிய சிங்களப் பெரும் பான்மைப் பிரதேசத்துடன் இணைக்கப்படாமல் தொடர்ந்து சுயநிர்ணய உரிமையுடன் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்குமானால் இந்த நாட்டின் இனப்பூசல்களை நாம் தவிர்த்திருக்கலாம்.
ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பை ஏற்படுத்து வதன் மூலம் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்தி, தமிழர்களின் பாதுகாப்பு நலனைப் பேணுவதற்கு இன்னும் காலம் கடந்துவிட வில்லை.
இலங்கைத் தீவில் பொறுப்புக் கூறல், நீதி நடவடிக்கை, மீள் நல்லிணக்கம் ஆகியவற்றைத் தூண்டித் துலங்கச் செய்வதற் கான அவசியத்தை, பிரிட்டனில் உள்ள தமிழ் மக்களுக்குத் தேர்த லுக்கு முன்னரான செய்தியாக நீங்கள் விடுத்தமையை நாம் நினைவு கூரவிரும்புகின்றோம்.
இங்கு இடம்பெற்றவையாகக் கூறப்படும் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் தொடர்பாக முழு அளவிலான சுயாதீன சுதந்திர விசாரணைகளை நடத்துமாறு 2013இல் இலங்கைக்கு விஜயம் செய்த உங்களின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் இங்கு இலங்கைக்கு அரசை வலியுறுத் தியமையை நான் இச்சமயத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM