கடந்த காலங்களைப் போல் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெறுவது கேள்விக் குறியாக இருந்தாலும் அதிகளாவான ஆசனங்களை பெறும் என நம்பிக்கை வெளியிட்ட புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் மாற்று அணியின் பிரவேசம் கூட்டமைப்பை பாதிக்கும் எனவும் தெரிவித்தார்.
வவுனியாவில் புளொட் அமைப்பின் மத்தியகுழு கூடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி தேர்தல் அதன் பின்னரான பெறுபேறுகள் மற்றும் தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டதுடன் அடுத்து வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடுவற்காகவே எமது மத்தியகுழு இன்று கூடியிருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு செல்லப்போகின்றோம் என்று என்றுமே நாம் சொன்னதில்லை. இன்றும் அதே நிலைப்பாடே உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். சில வேளைகளில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் அதற்குள் இருக்கும் கட்சிகளுக்குமிடையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அந்த ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் நாங்கள் அவதானமாக இருக்கின்றோம்.
எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூடும். அப்போது பேசி ஒரு சுமூகமான நிலைப்பாட்டை எடுப்போம் என நாங்கள் நம்புகின்றோம்.
மாற்று அணி ஒன்று உருவாகும் போது அது தமிழ் தேசியக்கூட்டமைப்பை பாதிக்க செய்யும். போட்டிகள் கூடுகின்ற போது கட்டாயமாக பாதிப்பு இருக்கும்.
அது தொடர்பில் நாங்கள் பேசுகின்றபோது கூடியவரையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளை கூட்ட முடியுமாயின் இன்னும் கூட்டவேண்டும் என்ற அவிப்பிராயமும் இருக்கின்றது. அது எவ்வளவு சாத்தியமென்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அந்த பிளவு இன்று கூடுதலாகவே இருக்கின்றது. அதனை மீண்டும் ஒற்றுமைப்படுத்துவது சாத்தியமில்லாவிட்டாலும் கூட இரண்டு மூன்று அணிகளாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது. எனவே மக்களே இனி தீர்மானிக்க வேண்டும்.
எனினும் எங்கள் கட்சியை பொறுத்தமட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான வாக்குவீதமே கூடுதலாக இருக்கும் என்றே நம்புகின்றோம். தமிழ் தேசியக்கூட்டமைப்பே கூடுதலான ஆசனங்களையும் பெறும். கடந்த காலங்களைப்போல் 16 ஆசனங்களை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் கூட அதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்ற எண்ணப்பாடு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் இருக்கின்றது.
தற்போதுள்ள கள நிலவரங்கள் எப்படி சாதக பாதகமாக மாறும் என்று கூற முடியாது விட்டாலும் கூட தேர்தலில் கணிசமான ஆசனங்களை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM