ஒன்றுபட்டால் வென்று விடலாம்

22 Dec, 2019 | 05:01 PM
image

-துரை­சாமி நட­ராஜா

ஒரு சமூ­கத்தின் அபி­வி­ருத்­திக்கு பல்­வேறு கார­ணிகள் உந்­து­சக்­தி­யாக அமை­கின்­றன. இவற்றுள் அச்­ச­மூ­கத்­தி­ன­ரி­டையே காணப்­படும் ஒற்­று­மையும் முக்­கிய கார­ணி­யாக அமை­கின்­றது. சமூ­கத்தின் ஒற்­றுமை சீர்­கு­லையும் போது அபி­வி­ருத்தி தடைப்­ப­டு­வ­தோடு மேலும் பல பாதக விளை­வு­களும் ஏற்­படும் என்­பதும் தெரிந்த ஒரு விட­ய­மே­யாகும். இந்த வகையில் மலை­யக சமூ­கத்தை எடுத்­துக்­கொண்டால் இச்­ச­மூ­கத்­தினரிடையே நிலவும் விரி­சல்கள், கட்சி ரீதி­யான மற்றும் தொழிற்­சங்க ரீதி­யான வேறு­பா­டுகள் உள்­ளிட்ட பலவும் இச்­ச­மூ­கத்­தி­னரின் எழுச்­சிக்கு தடைக்­கல்­லாக இருந்து வரு­வ­தாக புத்­தி­ஜீ­விகள் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர்.

மேலும் மலை­யக அர­சி­யல்­வா­திகள் இம்­மக்கள் சார்ந்த கோரிக்­கை­களை முன்­வைக்­கும்­போது பொது இணக்­கப்­பாட்­டுடன் ஓர­ணியில் நின்று கோரிக்­கை­களை முன்­வைப்­ப­தோடு, இவை வெற்­றி­பெற உரிய அழுத்­தங்­களை வழங்­க­வேண்டும் என்றும் புத்­தி­ஜீ­விகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 

மலை­யக சமூ­கத்­துக்கு இந்த நாட்டில் மிக நீண்ட வர­லாறு இருக்­கின்­றது. தனித்­துவம் மிக்க ஒரு சமூ­க­மாக இம்­மக்கள் இந்­நாட்டில் உரு­வெ­டுத்­திருக்கின்­றனர். கல்­வித்­து­றை­யிலும் ஏனைய பல துறை­க­ளிலும் இம்­மக்கள் ஆரம்ப காலங்­களைக் காட்­டிலும் இன்று எவ்­வ­ளவோ முன்­னேறி இருக்­கின்­றனர் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. தமது அடை­யா­ளத்­துடன் கூடிய ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்தைக் கோரு­கின்ற அள­விற்கு மலை­யக சமூகம் தலை­நி­மிர்ந்­தி­ருக்­கின்­றது என்றால் அது உண்­மையில் பாராட்­டத்­தக்க ஒரு விட­ய­மே­யாகும். எனினும் மலை­யக அடை­யா­ளத்­துடன் கூடிய ஒரு பல்­க­லைக்­க­ழகம் இம்­மக்­க­ளுக்­காக தேவை­தானா? என்ற ரீதி­யிலும் கருத்து வெளிப்­பா­டுகள் இருந்­து­வ­ரு­கின்­றன. புத்­தாக்கம் என்று வரும்­போது உல­க­ளா­விய ரீதி­யிலும் வர­லாற்று ரீதி­யிலும் பல எதிர்ப்­புகள் வெளிக்­கி­ளம்­பு­வது வழ­மை­யாகும். இது ஒன்றும் புதிய விட­ய­மல்ல. மலை­யக மக்­க­ளுக்கு பல்­க­லைக்­க­ழகம் என்றால் அங்கு ஒரு புத்­தாக்கம் இருக்­கின்­றது. மலை­யக மக்கள் என்­றாலே ஒரு தொழி­லாள வர்க்கம் என்ற அடை­யாளம் நீண்­ட­கா­ல­மா­கவே இருந்­து­வந்­தது. எனவே அவர்­க­ளுக்கு ஒரு பல்­க­லைக்­க­ழ­கமா? என்ற எண்ணம் பல­ரி­டையே காணப்­ப­டு­கின்­றது. தொழி­லாள வர்க்­கத்­தி­ன­ருக்கு ஒரு பல்­க­லைக்­க­ழகம் தேவை­தானா? என்று சிலர் சிந்­திக்­கின்­றார்கள். 

இங்­கி­லாந்து நாட்டில் புகை­யி­ரத பாதை­களை அமைத்­த­போது அதி­க­மான வர்கள் எதிர்ப்­பினை வெளி­யிட்­டி­ருந்­தனர். புகை­வரும், இடங்­களை ரயில்வே திணைக்­களம் சுவீ­க­ரித்­து­விடும் என்­றெல்லாம் கருத்­துகள் வெளி­யா­கின. எனினும் இப்­போது அந்­நாட்டில் புகை­யி­ரத நட­வ­டிக்­கைகள் சிறப்­பிடம் பெற்­றுள்­ளன. இத­னைப்­போன்றே தமிழ் நாட்டில் எட்டு வழிப்­பாதை இடப்­பட்ட நிலையைக் கண்­டித்து எதிர்ப்­புகள் தலை­தூக்­கின. மேலை நாடு­களில் உய­ர­மான கட்­ட­டங்கள் கட்­டப்­பட்­ட­போது ஆரம்­பத்தில் பலர் எதிர்ப்பு தெரி­வித்­தனர். பல கார­ணங்­க­ளையும் கூறினர். இவ்­வா­றாக புத்­தாக்கம் என்று வரு­கையில் எதிர்ப்­புகள் தலை­தூக்­கு­வது இயல்­பான ஒரு விட­ய­மாகும். மலை­யக பல்­க­லைக்­க­ழக விட­யத்­திலும் இது நடக்­கின்­றது. எதிர்ப்­பு­க­ளையும் மீறி பல்­க­லைக்­க­ழகம் சாத்­தி­ய­மாகும் என்று பர­வ­லாக நம்­பிக்­கையும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றெ­னினும் மலை­யக சமூ­கத்தின் கோரிக்கை மெச்­சத்­தக்­க­தே­யாகும். 

மலை­யக மக்கள் வர­லாற்றில் பல துன்ப துய­ரங்­க­ளையும் சந்­தித்­திருக்கின்­றார்கள். இன்னும் சந்­தித்தும் வரு­கின்­றார்கள். துன்ப துய­ரங்கள் தொடர்­க­தை­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றன. தமிழ்த் தொழி­லா­ளர்­களின் சோகக்­க­தையை மு.நித்­தி­யா­னந்தன் ‘கூலித் தமிழ்’ இல் தெளி­வாக எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார். தமி­ழ­கத்தின் வானம் பார்த்த பூமியில் வரண்­டு­போன கண்­மாய்­க­ளையும் பஞ்சம் பரி­த­விக்கும் முகங்­க­ளையும் பார்த்து கதி­யற்று நின்­ற­வர்கள் இலங்­கைக்கு அடி­மை­க­ளாகக் கடத்­தப்­பட்டு பட­கு­களில் திணிக்­கப்­பட்­டார்கள். பட­குகள் கவிழ்ந்து இறந்­த­வர்கள், புயல் காற்றில் தோணிகள் கவிழ்ந்து சமுத்­தி­ரத்­தோடு சங்­க­மித்­த­வர்கள் போக உயிர்­கொண்டு வந்­த­வர்கள் எலும்­புக்­கூ­டுகள் சமைத்த பாதை­களில் இரு­நூறு மைல்கள் வரை ஓட்­டிச்­செல்­லப்­பட்­டனர். இந்­தி­யாவில் கொளுத்தும் வெயிலில் குளுமை காட்டும் சொந்­த­மா­வது இருந்­தது. இங்கோ எலும்பை உருக்கும் குளிரில் அடர்ந்த விருட்­சங்­களின் கானகக் குரல் மட்­டுமே எதி­ரொ­லித்­தது என்­கி­றது கூலித்­தமிழ்.

இலங்­கையின் மலை­யகப் பகு­தி­களில் குடி­யேற்­றப்­பட்ட தமிழ்த் தொழி­லா­ளர்கள் அடி­மை­களை விடவும் மோச­மாக நடத்­தப்­பட்ட வர­லா­றுகள் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றன. தோட்­டத்­து­ரை­மாரின் கொடு­மை­யினால் தொழி­லாளி ஒருவர் உயி­ரி­ழக்­கவும் நேர்ந்­தி­ருக்­கி­றது. இது­பற்றி டொனோவொன் மொல்ட்ரிச் என்­பவர் தனது நூல் ஒன்றில் தெளி­வு­ப­டுத்தி இருக்­கின்றார். துரை பங்­க­ளாவில் கொய்யா மரத்தில் பழங்­களைப் பிடுங்­கி­ய­தற்­காக தோட்­டத்­து­ரைமார் சிறு­பிள்­ளை­களை இரத்தம் சிந்த அடித்­தி­ருக்­கின்­றார்கள். தோட்­டத்­து­ரையைப் பார்ப்­ப­தற்­காக மார்­புக்கு மேல் கைகளை குறுக்­காக போட்­ட­படி பவ்­வி­ய­மாக நின்ற இளை­ஞனைப் பார்த்து ஏதோ கார­ணத்தால் எரிச்­ச­ல­டைந்த துரை அவ்­வி­ளை­ஞனை தரக்­கு­றை­வாக திட்டித்

 தீர்த்த சம்­ப­வங்­களை நினை­வு­ப­டுத்தி எம் கண்­க­ளையும் கூலித்­தமிழ் குள­மாக்­கு­கின்­றது. அன்றில் இருந்து இன்­று­வரை தொழி­லா­ளர்­களை மனி­த­ரா­கவே கரு­தாமல் இழி­வாக நடத்தும் போக்கு துரைத்­த­னத்தின் ரத்­தத்தில் ஊறிப்போய் உள்­ள­மையும் இங்கு சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. 

பல்­வேறு சுரண்­டல்­க­ளுக்கும் உள்­ளான மலை­யக மக்கள் பல்­வேறு வகை­யிலும் ஏமாற்­றப்­பட்­டமை ஒன்றும் புதிய விட­ய­மல்ல. சுதந்­தி­ரத்­துக்கு முன்­னரும் பின்­னரும் மலை­யக சமூ­கத்­தி­னரின் மீதான நெருக்­கீ­டுகள் தொடர்ந்து கொண்டே இருக்­கின்­றன. இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிர­சா­வு­ரி­மையும் வாக்­கு­ரி­மையும் பறிக்­கப்­பட்டு சகல துறை­க­ளிலும் அம்­மக்­களை நிர்­வா­ணப்­ப­டுத்­தி­யமை இலங்­கையின் வர­லாற்றில் ஒரு கறை­ப­டிந்த நிகழ்­வே­யாகும். இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் எண்­ணிக்­கையை குறைக்கும் நட­வ­டிக்­கைகள், ஒப்­பந்­தங்கள், இடம்­பெறச் செய்­தமை, இம்­மக்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றைகள் எனப்­பல திட்­ட­மிட்ட செயற்­பா­டு­களும் வெற்­றி­க­ர­மாக இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இனியும் இடம்­பெ­றாது என்­ப­தற்கு எவ்­வி­த­மான உத்­த­ர­வா­தமும் இல்லை. 

          இன­வா­தி­களின் இலக்கு

இலங்கைத் தமிழர், இந்­திய வம்­சா­வ­ளி­யினர், முஸ்­லிம்கள் என்ற அனைத்து சிறு­பான்மை இனங்­க­ளையும் மழுங்­க­டிக்கச் செய்யும் முனைப்­புகள் தொடர்ச்­சி­யா­கவே இடம்­பெற்ற வண்­ண­மாக உள்­ளன. இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய நிலையில் இது­கு­றித்து இத­ய­சுத்­தி­யு­ட­னான நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­வ­தாக இல்லை. இலங்­கையில் இருந்­தது பயங்­க­ர­வாதப் பிரச்­சி­னையே. பிர­பா­கரன் இறந்த கையோடு அதுவும் முடிந்­து­விட்­டது. எனவே இனப்­பி­ரச்­சினை என்று ஒன்று இல்­லாத நிலையில் அதற்­கான நிரந்­தர அர­சியல் தீர்வு குறித்தோ அல்­லது வேறு விட­யங்கள் குறித்தோ சிந்­திக்­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று சில மேதா­விகள் கருத்­து­களை வெளிப்­ப­டுத்தி இருப்­ப­த­னையும் எம்மால் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தா­கவே உள்­ளது. உச்­ச­கட்ட அதி­காரப் பகிர்வு, சமஷ்டி முறை­யி­லான தீர்வு என்­பன பற்றிப் பேசு­வ­தற்கும் கேட்­ப­தற்கும் நன்­றாக இருக்­கின்­றது. ஆனால் சாதக விளை­வுகள் எட்­டாக்­க­னி­யாகி இருக்­கின்­றது. 

முஸ்லிம் மக்­களை பொரு­ளா­தார ரீதி­யா­கவும், கலா­சார ரீதி­யா­கவும் வீழ்ச்­சி­ய­டையச் செய்யும் நட­வ­டிக்­கை­களில் கடந்த காலத்தில் இன­வா­திகள் ஈடு­பட்­டி­ருந்­தனர். ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புச் சம்­பவம் இன­வா­தி­க­ளுக்கு தீனி­போட்­டி­ருந்­தது. ஒரு குழு­வி­னரின் செயற்­பா­டு­களால் ஒரு சமூ­கத்தை வேர­றுக்க இவர்கள் திட்­ட­மிட்­டனர். வர­லாற்றில் தொடர்ச்­சி­யா­கவே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வந்­தி­ருப்­பதைக் காணலாம். இன­வா­திகள் முஸ்­லிம்­களின் வளர்ச்­சியின் மீது கொண்ட பொறா­மையின் விளை­வாக இந்­ந­ட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருந்­தன. 

இன­வா­திகள் மலை­யக மக்­க­ளையும் விட்டு வைக்­க­வில்லை. இம்­மக்­களை ஓரம் கட்­டு­வதை குறி­யா­கக்­கொண்டு பல நட­வ­டிக்­கைகள் இடம் பெற்­றி­ருக்­கின்­றன. தீர்­மா­னிக்கும் சக்தி மற்றும் பேரம் பேசும் சக்தி என்­பன மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்மை மக்­க­ளிடம் இருந்து கைந­ழுவிப் போய் இருக்­கின்­றது. இச்­ச­மூ­கங்­க­ளுக்கு இடையே காணப்­பட்ட மற்றும் இச்­ச­மூ­கங்­க­ளுக்கு உள்ளே காணப்­பட்ட விரி­சல்­களும் இந்­நி­லைக்கு வலு­ச்சேர்த்­தி­ருக்­கின்­றது என்றால் மிகை­யா­காது. எனவே சிறு­பான்மை சமூ­கங்கள் தமக்­கி­டை­யேயும் தமக்­குள்­ளேயும் ஐக்­கி­யத்­து­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் செயற்­பட வேண்­டிய ஒரு அவ­சி­யப்­பாடு மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது. சிறு­பான்­மை­யி­னரின் பிள­வுகள் கூத்­தா­டிக்கு கொண்­டாட்­ட­மாகி விடக்­கூடும் என்­ப­த­னையும் மறந்து விடு­த­லா­காது. 

தொழி­லாளர் எண்­ணிக்கை

பெருந்­தோட்டத் தொழில்­துறை எதிர்­கொள்ளும்  சவால்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றது. கம்­ப­னி­யி­னரின் அடக்­கு­முறை, எதேச்­ச­தி­காரம் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வதும் நீங்கள் அறிந்த விட­ய­மே­யாகும். பெருந்­தோட்ட சேவை­யா­ளர்­களின் பல பிரச்­சி­னை­க­ளுக்கும் உரிய தீர்­வினைப் பெற்­றுக் கொடுக்­காது கம்­ப­னிகள் இழுத்­த­டிப்பு நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்டு வரு­வ­தாக குற்றச் சாட்­டுக்கள் பலவும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. பெருந்­தோட்ட நிலங்கள் அபி­வி­ருத்தி என்னும் போர்­வையில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இதனால் தேயி­லையின் விளை­நிலம் குறை­வ­டை­கின்­றது. இதனால் தொழி­லா­ளர்­களின் வேலை­வாய்ப்­புகள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. தேயிலைத் தோட்­டங்­களில் பதிவு செய்­துள்ள  தொழி­லா­ளர்­களின் எண்­ணிக்கை முன்­னைய காலங்­களை விட இப்­போது சடு­தி­யான வீழ்ச்சி நிலை­யினை எதிர்­நோக்கி இருக்­கின்­றது.  1980 ஆம் ஆண்டில் பெருந்­தோட்­டங்­களில் 5 இலட்­சத்து 41 ஆயி­ரத்து 971 தொழி­லா­ளர்கள் பதிவு செய்­தி­ருக்­கி­றார்கள். இந்­நி­லையில் 1990 இல் நான்கு இலட்­சத்து எட்­டா­யி­ரத்து  784 தொழி­லா­ளர்­களும் 1995 இல் மூன்று இலட்­சத்து இரண்­டா­யி­ரத்து 743 தொழி­லா­ளர்­களும் 2005  ஆம் ஆண்டில் இரண்டு இலட்­

சத்து 46 ஆயி­ரத்து 478 தொழி­லா­ளர்­களும் 2010 ஆம் ஆண்டில் இரண்டு இலட்­சத்து 12 ஆயி­ரத்து 826 தொழி­லா­ளர்­களும் தேயிலைப் பெருந்­தோட்­டங்­களில் பதிவு செய்து கொண்­டி­ருந்­தனர். 2015 ஆம் ஆண்டில் இத்­தொ­கையில் கணி­ச­மான ஒரு வீழ்ச்சி நிலை­யினை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது. அந்த ஆண்டில் ஒரு இலட்­சத்து 58 ஆயி­ரத்து  322 தொழி­லா­ளர்­களே பெருந்­தோட்­டங்­களில் பதிவு செய்து கொண்­டி­ருந்­தனர். எனவே பெருந்­தோட்ட தொழில்­து­றையின் எதிர்­காலம் தொடர்பில் சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது. 

பெருந்­தோட்­டங்­களைக் காட்­டிலும் சிறு­தோட்­டங்கள் தற்­போது ஆதிக்கம் மிக்­க­ன­வாக விளங்­கு­கின்­றன. உற்­பத்தி உள்­ளிட்ட பல விட­யங்­க­ளிலும் பெருந்­தோட்­டங்கள் இப்­போது பின்­தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. இலங்கை பெருந்­தோட்­டங்­க­ளிலும் சிறு தோட்­டங்­க­ளிலும் மேற்­கொள்­ளப்­பட்ட தேயிலை உற்­பத்­தியின் அளவை நோக்­கும்­போது அது பின்­வ­ரு­மாறு அமை­கின்­றது.  1995 ஆம் ஆண்டு இலங்­கையில் 280.1 மில்­லியன் கிலோ கிராம் தேயிலை உற்­பத்தி செய்­யப்­பட்­டது.  இதில் 168.8 மில்­லியன் கிலோ கிராம் தேயிலை பெருந்­தோட்­டங்­க­ளிலும் 111.3 மில்­லியன் கிலோ கிராம் தேயிலை சிறு தோட்­டங்­க­ளிலும் உற்­பத்தி செய்­யப்­பட்­டது. இதே­வேளை இரண்­டா­யி­ரமாம் ஆண்டு  பெருந்­தோட்­டங்­களில் 100.1  மில்­லியன் கிலோ கிராமும் 2010 ஆம் ஆண்டில் 100.8மில்­லியன் கிலோ கிராமும் 2017 இல் 104 மில்­லியன் கிலோ கிரா­மு­மாக தேயிலை உற்­பத்தி இருந்­தது. இந்­நி­லையில் சிறு தோட்­டங்­களில் 2000ஆம் ஆண்டு 183.8 மில்­லியன் கிலோ கிராமும் 2010 ஆம் ஆண்டில் 230.1 மில்­லியன் கிலோ கிராமும் 2017 ஆம் ஆண்டில் 244 மில்­லியன் கிலோ கிரா­மு­மாக தேயிலை உற்­பத்தி காணப்­பட்­டது. 

இவை­களைக் கருத்­தில்­கொண்டு பார்க்­கையில் பெருந்­தோட்­டங்கள் வீழ்ச்சிப் போக்கை  வெளிப்­ப­டுத்­து­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.  அர­சாங்கம் பெருந்­தோட்­டங்­களை  புறந்­தள்ளி  செயற்­படும் நிலையில் சிறு தோட்­டங்­க­ளுக்கு வச­திகள் பல­வற்­றையும் செய்து கொடுப்­ப­தாக கருத்­துக்கள் நில­வு­கின்­றன. உர­மா­னியம் கடன் வச­திகள் எனப்­ப­லவும் இதில் உள்­ள­டங்­கு­கின்­றன.  எனவே அர­சாங்­கத்தின் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யு­ட­னான  செயற்­பாடு பெருந்­தோட்­டங்­களின் பின்­ன­டை­வுக்குக்  காரணம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பெருந்­தோட்­டங்­களின் இருப்பும் தொழி­லா­ளர்­களின் இருப்பும் இன்று  கேள்­விக்­கு­றி­யா­கிக்­கொண்­டி­ருக்கும் நிலையில் இது குறித்த மலை­யக அர­சி­யல்­வா­திகள் கவனம் செலுத்­துதல் மிகவும் அவ­சி­ய­மாகத் தேவைப்­ப­டு­கின்­றது. 

முன்­வைப்­புகள் 

மலை­யக அர­சியல் கட்­சிகள் இம்­மக்­களின் நலன் கருதி பல்­வேறு கோரிக்­கைகளை தேர்தல் காலங்­களில் முன்­வைப்­பதை நாம் அவ­தா­னிக்­கின்றோம். இத­ன­டிப்­ப­டையில் கடந்த 2015 ஆம்  ஆண்டில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தேர்தல் விஞ்­ஞா­பனம் பின்­வ­ரு­மாறு அமைந்­தி­ருந்­தது.  மலை­யக தமிழ் மக்­களின் அடை­யாளம் லயத்­திற்கு பதி­லாக தனி­வீடு, காணிப் பிரச்­சி­னைக்­கான தீர்வு, சுயத்­தொழில் முயற்­சி­யாளர் சம்­மே­ளனம், உள்­ளூ­ராட்சி  நிறு­வ­னங்கள், மலை­யக தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி, வீட­மைப்பு அதி­கார சபை, மாகாண கல்வி அமைச்சு, மலை­யக மக்­க­ளுக்கு அரச நிர்­வா­கத்தில் பங்கு, மலை­யகத் திற்­கான பல்­க­லைக்­க­ழகம், பாரா­ளு­மன்ற– மாகாண  சபை– உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் மலை­யக மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் என்று பல்­வேறு விட­யங்­களும் இதில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.  

மலை­யக கல்­வியின் குறை­வ­ளர்ச்சி நிலை­மையைக் கருத்­தில்­கொண்டு தனியார் கல்­வி­யியல் கல்­லூரி மற்றும் தொழில்­நுட்பக் கல்­லூரி ஸ்தாபிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கவனம் செலுத்­தப்­பட்­டி­ருந்­தது.  இதே­வேளை  இம்­முறை ஜனா­தி­பதி தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் புதிய ஜன­நா­யக முன்­னணி, தமிழ் முற்­போக்கு  கூட்­ட­ணியின் கோரிக்­கைக்­கேற்ப பல்­வேறு விட­யங்கள் மலை­யக மக்கள் தொடர்பில் உள்­ள­டக்கி இருந்­தன.  தோட்டத் தொழி­லா­ளரின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்கும் நோக்கில் பெருந்­தோட்டத் துறை மீள்­கட்­ட­மைப்பு பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளையும் உள்­ள­டக்­கிய மலை­யக தமிழ்ச் சமூ­கத்தை அங்­கீ­க­ரித்தல், ஜனா­தி­பதி செய­லணி, கல்வி, நிலமும் வீடும், கைத்­தொழில் வல­யங்கள், பொது நிர்­வாகம் என்று பல விட­யங்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.

இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் தோட்­டங்­களை கிரா­மங்­க­ளாக  மாற்றும் நிலைமை தொடர்பில் ஏற்­க­னவே கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. இதே­வேளை 32 அம்ச கோரிக்­கை­க­ளையும் முன்­வ­வைத்­தி­ருந்­தது. முழு­மை­யான பல்­க­லைக்­க­ழகம்  ஒன்­றினை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் அமைக்­க­வேண்டும். ஊவா மாகா­ணத்தில் கல்­வியியல் கல்­லூரி ஒன்றை அமைக்­க­வேண்டும். இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் பிராந்­திய கிளையை ஹட்­டனில் நிறு­வுதல், பெருந்­தோட்ட மக்கள் அதி­க­ளவில்   வாழ்­கின்ற 14 மாவட்­டங்­களில் உயர்­தர விஞ்­ஞான, வர்த்­தகப் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய  பாட­சா­லை­களை தேவை­யான அளவு

 உரு­வாக்­குதல், அரச தொழில் வாய்ப்பில் இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் பங்­க­ளிப்பை அதி­க­ரித்தல், பெருந்­தோட்­டங்­களில் இயங்­கா­துள்ள தொழிற்­சா­லை­களை இளைஞர் யுவ­தி­களின் தொழில் வாய்ப்­புக்­காக மாற்­றி­ய­மைத்தல் எனப் பல விட­யங்­களும் இதில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆரம்ப சுகா­தார மையங்­களை பெருந்­தோட்­டங்­களில் உரு­வாக்­குதல், பிர­தேச செய­லக அதி­க­ரிப்பு, கிராம உத்­தி­யோ­கத்தர் பிரிவு எல்­லை­களை மீள­மைத்தல் என்­ப­னவும்  இதில் உள்­ள­டங்கும். 

இவற்­றுடன் இலங்கைத் தொழி­லாளர் ஐக்­கிய முன்­ன­ணியும் பல கோரிக்­கை­களை ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பா­ய­விடம் முன்­வைத்­தி­ருந்­தது. தொழி­லாளர் சம்­பள உயர்வு, கல்வி மற்றும் சுகா­தார அபி­வி­ருத்தி எனப் பல்­வேறு விட­யங்­களும் இதில் உள்­ள­டங்கி இருக்­கின்­றன.

பொது இணக்­கப்­பாடு 

மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் பலவும் இன்னும் தீர்க்­கப்­ப­டாத நிலையில் உள்­ளன. கல்வி, சுகா­தாரம், அர­சியல் சமூக நிலை­மைகள், வீட­மைப்பு உள்­ளிட்ட பல்­வே­று­பட்ட பிரச்­சி­னை­களும் இதில் உள்­ள­டங்கிக் காணப்­ப­டு­கின்­றன. இவற்­றுடன் நான் ஏற்­க­னவே குறிப்­பிட்­டுள்­ள­தைப்­போன்று இன­வா­தி­களின் மேலெ­ழும்­பு­கை­யா­னது மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­களின் எழுச்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருக்­கின்­றது. இன­வா­தத்­தினால் நாடு துன்ப, துய­ரங்கள் பல­வற்றை ஏற்­க­னவே அனு­ப­வித்­தி­ருக்­கின்­றது. எனினும் இன­வா­திகள் இன்னும் திருந்­து­வ­தாக இல்லை. எனவே இன­வாத தீயில் இருந்து மலை­யக மக்­களைக் காப்­பாற்­ற­வேண்­டிய ஒரு மிக முக்­கி­ய­தேவை காணப்­ப­டு­கின்­றது. தோட்­டங்­க­ளி­னதும், தொழி­லா­ளர்­க­ளி­னதும் இருப்பு கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்­றது. எனவே இவற்றைத் தக்­க­வைத்துக் கொள்ளும் வழி­மு­றைகள் குறித்து ஆழ­மாகச் சிந்­தித்து செயற்­ப­டுதல் வேண்டும். தோட்­டங்­க­ளி­னதும், தொழி­லா­ளர்­க­ளி­னதும் இருப்பு கேள்­விக்­கு­றி­யானால் தொழிற்­சங்­கங்­களும், அர­சி­யல்­வா­தி­களும் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கும் முகம்­கொ­டுக்க வேண்­டிய ஒரு நிலைமை ஏற்­படும் என்­ப­த­னையும் மறந்து விடு­த­லா­காது. ஒவ்­வொரு சமூ­கத்­தி­ன­ருக்கும் அவ­ர­வர்தம் அடை­யா­ளங்கள் மிகவும் முக்­கி­ய­மா­ன­வை­யாக விளங்­கு­கின்­றன. இவற்றை உரி­ய­வாறு பாது­காத்துக் கொள்­வது அவ­சி­ய­மாகும். 

இன்று மலை­ய­கத்­த­வர்கள் சிலர் சிங்­க­ள­ம­ய­மாகி வரு­வ­தனை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. சிங்­க­ளத்தில் பேசி, சிங்­க­ள­வர்­களைப் போல உடை­களை அணிந்­து­கொண்டு சிங்­க­ள­வர்­களைப் போன்று காரி­ய­மாற்றும் நட­வ­டிக்­கை­களில் மலை­ய­கத்­த­வர்கள் சிலர் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இந்­நி­லை­மை­யா­னது மோச­மான பின்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­தாகும் என்­பது யாவரும் அறிந்த ஒரு விட­ய­மாகும். எனவே எம்­ம­வர்கள் சிங்­க­ள­ம­ய­மாக முற்­ப­டு­வதில் இருந்தும் அவர்­களைப் பாது­காக்­க­வேண்­டிய ஒரு தேவை காணப்­ப­டு­கின்­றது.

தொழி­லா­ளர்­களின் லயத்து வாழ்க்­கை­யினால் பாதக விளை­வுகள் பலவும் ஏற்­ப­டு­கின்­றன. எனவே லயத்து கலா­சா­ரத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்து தனி­வீட்டு கலா­சா­ரத்தை துரி­த­மாக முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. நாடு­களின் வெற்­றிக்கு நிறு­வ­னங்­களின் சீரான, சிறப்­பான இயக்கம் என்­பது முக்­கி­ய­மா­ன­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. நிறு­வ­னங்­களின் முறை­யான இயக்­க­மின்மை, செயற்­பாட்­டுத்­தி­ற­னின்மை கார­ண­மாக நாடுகள் தோல்­வி­ய­டை­வ­தாக பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன் குறிப்­பி­டு­கின்றார். இது முற்­றிலும் உண்­மை­யான ஒரு கருத்­தாகும். பல நாடு­க­ளிலும் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­களும் இதனை நிரூ­பிப்­ப­தா­கவே உள்­ளன. இப்­ப­டிப்­பார்க்­கையில் வைத்­தி­ய­சா­லைகள், கல்­வி­யியல் கல்­லூ­ரிகள், ஆசி­ரியர் பயிற்சிக் கல்­லூ­ரிகள், தொழிற்­ப­யிற்சி நிலை­யங்கள், பாட­சா­லைகள் பல்­க­லைக்­க­ழ­கங்கள் எனப் பல நிறு­வ­னங்­களும் முறை­யாக இயங்­கு­வ­தோடு சமூக அபி­வி­ருத்­திக்கு வழி­காட்­டவும், வலு­சேர்க்­கவும் வேண்டும். இவை­களின் முறை­யான உச்­ச­கட்ட நன்­மை­களை மலை­யக சமூ­கத்­திற்கும் நாட்­டுக்கும் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு மலை­யக அர­சி­யல்­வா­திகள் உறு­தி­பூ­ணுதல் வேண்டும்.

மலை­யக மக்­களின் வாழ்க்கைத் தரா­த­ரங்கள் கீழ்­நி­லையில் உள்­ளன. வரு­மானப் பற்­றாக்­குறை இதில் கூடி­ய­ளவு தாக்கம் செலுத்­து­கின்­றது. எனவே இம்­மக்­களின் வாழ்க்கைத் தரத்­தினை உயர் மட்­டத்தில் வைப்­ப­தற்­கான காய் நகர்த்­தல்கள் மேற்­கொள்­ளப்­படல் மிகவும் இன்­றி­ய­மை­யா­த­தா­கின்­றது. ஏனைய சமூ­கங்­க­ளுக்கும் மலை­யக சமூ­கத்­திற்கும் இடை­யே­யான விரிசல் நிலை அல்­லது இடை­வெளி என்­பது அதி­க­முள்­ளது. எனவே இந்த இடை­வெளி இனங்­கா­ணப்­பட்டு நிரப்­பப்­ப­டுதல் வேண்டும். 

மலை­யக மக்­களின் அபி­வி­ருத்தி கருதி நேர்­நிலை பார­பட்சம் என்ற அடிப்­ப­டையில் அர­சாங்கம் விசேட உத­வி­க­ளையும் சலு­கை­க­ளையும் மலை­யக மக்­க­ளுக்குப் பெற்றுக் கொடுக்­க­வேண்டும் என்ற கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவற்றை சாத­க­மாக்­கிக்­கொள்ள அர­சி­யல்­வா­திகள் முழு­மூச்­சுடன் செயற்­ப­டுதல் வேண்டும். 

இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், தமிழ்

 முற்­போக்கு கூட்­டணி, இலங்கை தொழி­லாளர் ஐக்­கிய முன்­னணி உள்­ளிட்ட மலை­யக கட்­சிகள் பலவும் மலை­யக மக்­களின் நலன்­க­ருதி கோரிக்­கைகள் பல­வற்றை தனித்­த­னி­யாக முன்­வைத்­தி­ருக்­கின்­றன. இது உரிய சாதக விளைவுகளை ஏற்படுத்துமா? என்பது கேள்விக்குறியாகும். 

தனித்து குரல் கொடுப்பதை விட பல கட்சிகளையும் இணைத்துக் கொண்டு குழுவாக குரல் கொடுக்கையில் சாதக விளைவுகள் அதிகமாகும். குழுவினரின் அழுத்தமானது வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் என்பதனை மறுக்க முடியாது. மலையக அரசியல்வாதிகள் தனித்தனியாக கோரிக்கைகளை முன்வைப்பதை விட பொதுவான கோரிக்கைகளை ஐக்கியத்துடன் முன்வைத்து வெற்றிபெற முயற்சிக்க வேண்டும். பொது இணக்கப்பாடு என்பது மிகவும் அவசியமாகும்.

பிரிந்து நிற்பது ஏன்?

மலையக அரசியல்வாதிகள் பிரிந்து நின்று செயற்படுவதன் காரணமாக மக்கள் அதனால் பாதிப்பிற்கு முகம்கொடுக்க வேண்டி வருகின்றது என்பதே உண்மையாகும். மக்களின் உரிமைகள் பறிபோவதற்கு இப்பிரிவுகள் வலுச்சேர்க்கின்றன. மலையக அரசியல்வாதிகள் ஏன் பிரிந்து செயற்படுகின்றார்கள்? என்று நாம் நோக்குகின்ற போது தனிப்பட்ட வேறுபாடுகள், ஆளுமை, சுயநலன்கள் என்ற அடிப்படையிலேயே அவர்கள் பிரிந்து நின்று செயற்படுவதனைக் காணமுடிகின்றது. மலையக மக்களின் தீர்க்கப்படாத முக்கிய தேவைகள் பல காணப்படுகின்றன. இவற்றை நிறைவேற்றிக்கொள்ளவேனும் அவர்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் வேண்டும். அடையாளத்தை பேணுகின்ற முனைப்பில் இவர்கள் ஒற்றுமையைக் காண்பிக்கவேண்டும்.

மலையக அரசியல்வாதிகளிடையே கொள்கை ரீதியான அல்லது சித்தாந்த ரீதியான வேறுபாடு கிடையாது. குறிப்பாக இத்தகைய வேறுபாடுகள் இவர்களிடம் காணப்படவில்லை. அரசாங்கத்துடன் சேர்ந்து ஒத்துழைப்பதனையே இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

வட பகுதியைப் பொறுத்தவரையில் சில கட்சிகள் அரசாங்கத்துடன் ஒத்து ழைக்கின்றன. இன்னும் சில கட்சிகள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முடியாது என்று வெளிப்படையாகவே கூறி வருகின்றன. மலையகத்தைப் பொறுத்தவரையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய தேசிய கட்சிக்கும், இ.தொ.கா. பொதுஜன முன்னணிக்கும் ஆதரவு வழங்குகின்றது. எனவே கொள்கை ரீதியான வேறுபாடுகளை எம்மால் இனம்காண முடியாதுள்ளது. தனிப்பட்ட வேறுபாடுகளே பிரிவுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. தலைமைத்துவப் போட்டி என்பதும் இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது. கட்சிகள் ஒன்றிணைகையில் தலைமைத்துவம் குறித்த பிரச்சினைகள் மேலெழும்பும். எல்லோரும் தலைவராக முடியாது. கூட்டுத் தலைமை என்பதும் இங்கு சாத்தியமானதாகத் தென்படவில்லை. கட்சிகள் ஒன்றிணையும் போது யார் தலைமைத்துவத்தை ஏற்பது என்ற பிரச்சினை மேலெழும்புகின்றது. கூட்டுத் தலைமை சாத்தியப்படாத நிலையில் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டியுள்ளது. இது சிக்கல்களை தோற்றுவிப்பதாக உள்ளதுடன் கட்சிகளின் இணைவிற்கும் தடையாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54