இலங்கையில் முஸ்லிம்களின் சமூக இருப்பின்மீதும் அவர்களின் அரசியலின்மீதும் எதிர்காலத்தில் தொடுக்கப்படவுள்ள தீவிரவாத யுத்தத்துக்கான முஸ்தீபு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தீவிரமாயிற்று என்பது வெளிப்படையான உண்மை. அதற்கு முன்னர் குறிப்பாக உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தவுடனேயே அவர்கள் மீதான தாக்குதல் மற்றும் சுரண்டல் முயற்சியானது சிறிது சிறிதாக வளர்ந்துகொண்டே வந்தது. சில பேரினவாத துறவிகளோடு சில அரசியல்வாதிகளும் சேர்ந்து இதன் வளர்ச்சிக்கு தூபமிட்டமை சர்வதேசம் எங்கும் பிரபலம்பெற்ற சங்கதியாகும்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் அகப்பட்டுக்கொள்ளாது அம்மக்கள் தப்பி ஓடிச்செல்லுதல் என்பது நடைமுறைச் சாத்தியமற்றதாகவே அமைந்துவிடப் போகின்றது. அந்த தாக்குதல் சம்பவமானது வெறும் ஓர் உள்நாட்டுப் புரளியாக மாத்திரமே இருந்தது என்பது நகைப்புக்குரியதே. அப்படிக் கூறிக்கொள்ளும் சிலர் தங்கள் அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முயல்கின்றனர் அல்லது புதிதாக பிரதிநிதித்துவ அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாகின்றனர் என்பதே அதன் அர்த்தம். அக்கூற்றானது இன்னும் சிலருக்கு உண்மைபோலவும் தோன்றக்கூடும். ஆனால், அது திட்டமிடப்பட்ட வெளிவாரி சக்திகளின் உலகளாவியதானதொரு நிகழ்ச்சிநிரலின் இலங்கைக்கான ஓர் அலகு மாத்திரமே.
ஏப்ரல் தாக்குதல் முஸ்தீபுக்கான வரைபடம் இஸ்லாமோபியாவை உருவாக்கியவர்களால் கணித அடிப்படையில் ஏற்கனவே வரைந்தாகிவிட்டது. இலங்கை முஸ்லிம்களின் புலக்காட்சிக்கு தென்படாத இடங்களிலிருந்தே அது திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வரைபடத்துடன் அதன் நீண்ட பாதையும் படிமுறையும் அச்சொட்டாக நிர்ணயமாகிவிட்டது. அந்த மக்களை குறிவைத்துள்ள அதுபற்றிய விடயங்களை பகிரங்கப்படுத்தாத சக்திகளால் ஏற்கனவே விவாதித்து முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதன் அமுலாக்கல் நடவடிக்கைகள்தான் சன்னஞ்சன்னமாக தற்போது முன்னேற்றம் கண்டு வருகின்றன. அது சில உள்ளூர் வகைமாதிரிகளைக்கொண்டு பொம்மலாட்டம் செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சித்திட்டம் மாத்திரமே.
அந்த செயற்திட்டத்துக்கான சரியான தளமும் வியூகமும் மட்டுமன்றி செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழ்நிலைகளும் தற்போது தெற்காசியாவில் மிகக்கச்சிதமாக கைகூடி வந்துள்ளது. அதன் ஆகப்பிந்திய தெற்காசிய உதாரணம் இந்திய உபகண்டத்தில் தற்போது அரங்கேற்றப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டம். இலங்கையில் அந்த சமூகச் சூழ்நிலை ஏற்படுவதற்கான சர்வதேசப் பின்னணிகளைக் கொண்ட காரணங்கள் பற்றிய அலசலும் அறிவூட்டலுமே இக்கட்டுரையின் நோக்கம்.
மேற்குறித்த பயங்கரவாத திட்டத்தில் மூன்று முக்கிய சக்திகள், சர்வதேச ரீதியான ஓர் வலைப்பின்னலின் (International Network) ஊடாக ஒரு நேர்கோட்டில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்கள் வரைந் தெடுத்த வரைபடம் பற்றி மக்களுக்கிடையிலான பரந்துபட்ட அறிவூட்டலும் உணர்ச்சிப் படுத்தலும் அவ்வப்பிராந்திய மக்கள் கூட்டத்தின் அறிவியல், கலாசாரம், பொருளில், சமூகவியல், அரசியல், வரலாறு மற்றும் ஒழுக்கவியல் பின்னணிகளுக்கு அமைவாக திட்டமிட்ட அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதலில் அந்த சங்கிலித்தொடரில் கொழுவப்பட்டுள்ள சக்திகள் யார் யார் என்பது பற்றி திட்டவட்டமாக நிரல்படுத்தினால் அது புதிய ஆய்வு முயற்சிகளுக்கு உந்துசக்தியாக அமைந்துவிடும்.
தத்துவார்த்த ரீதியாகவும் மரபு ரீதியாகவும் முஸ்லிம்களை எதிரி மனோபாவத்துடன் கையாண்டுவரும் சர்வதேச சக்திகள் இதில் முதலாமிடத்தைப் பிடித்துள்ளன. அவர்கள்தான் சர்வதேசத்தை தங்களின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொருளியல்சார் அறிவுப்பலத்துடன் பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சக்திகளாவர். தங்களுக்குள்ளேயே பல்வேறு புவிசார் அரசியல் (Geo- - politics)முரண்பாடுகள் மற்றும் பொருளாதாரப் போட்டிகள் இருந்தபோதிலும் உலக முஸ்லிம் ராச்சியங்களை தங்களது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய சந்தர்ப்பங்களில் அந்த வேறுபாடுகளை அடக்கிவாசிக்க அவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களை வல்லரசுகள் என்றும் கருத முடியும். அவர்கள்தான் வரலாற்றுக்காலம் தொடக்கம் உலக வரைபடத்திலிருந்து இஸ்லாமிய நாடுகளை துடைத்தெறிதல் என்னும் ஒற்றை இலக்கில் சிந்தித்து வருபவர்கள். இன்று அவர்கள் தங்கள் இலக்கை நோக்கிய இரட்டை வழியில் கவனம் செலுத்தி வருகின்றார்கள்.
அவற்றுள் முதலாவது வழியை கடைப்பிடிப்போர் பொருளியல்சார் தாக்குதலில் ஈடுபடுபவர்கள். இந்த நோக்கத்துக்காக தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழுள்ள உலக கார்ப்ரேட்டுகளை இவர்கள் பயன்படுத்துகின்றனர். இரண்டாவது வழியைக் கடைப்பிடிப்போர் இறையியல் (Theology) மற்றும் தத்துவார்த்த தாக்குதலில் ஈடுபடுபவர்கள்.
மேற்படி சக்திகளை புவிசார் அரசியலில் மேற்கத்திய (Western) சக்திகள் என்று பொதுவாக அழைக்கலாம். இவர்களுக்குள் மேற்கு ஐரோப்பியர் மற்றும் கிழக்கு ஐரோப்பியர் என்ற புவியியல் வேறுபாடு இருந்தபோதிலும் முஸ்லிம்களை விரட்டியடித்தல் என்னும் அவர்களின் பொதுவான எதிர்பார்ப்பை கருத்திற்கொண்டு ஓர் அடிப்படைவாத மெய்யியலின் ஸ்தாபகர்கள் அவர்களை இயக்கி வருகின்றார்கள்.
இரண்டாவது சக்தி புவிசார் அரசியலில் மத்தியகிழக்கு என்ற சுற்றுவட்டத்துள் உள்ளடக்கி அழைக்கப்படும் யஹூதிய சக்தியாகும். தத்துவார்த்த அர்த்தத்தில் அவர்கள் இஸ்லாமிய இறையியலின் புவியியல் அடிப்படையிலான முற்றுகைக்குள் (Geographical Siege)இருந்தாலும்கூட அந்த முற்றுகைக்கு மேலான ராஜதந்திர அடிப்படையிலான ஒரு சக்கரவியூகத்தை மேற்கத்திய சக்திகளின் அரவணைப்புடன் உருவாக்கியவர்களாவர். தங்களின் பூரண கண்காணிப்பின்கீழ் மத்தியகிழக்கு ஆட்சியாளர்களையும் அவர்களின் புலமைத்துவ ஆலோசகர்களையும் வைத்திருப்பவர்களே அப்பிரிவுக்குள் அடங்குவர்.
அவர்கள் புவியியல் அடிப்படையில் சர்வதேசம் எங்கணும் சிதறிவாழ்ந்தாலும் அவர்களின் இலக்கின் அடிப்படையில் தேசங்களுக்கான எல்லைக் கோடுகளின் கட்டுப்பாடுகளை மீறி ஒரு கட்புலனாகா இழைக்குள் செயல்படுபவர்கள். இரண்டாம் உலக யுத்தம்வரை நாடற்றவர்களாக இருந்த அவர்கள் இன்று மத்தியகிழக்கில் எல்லா நிலப்பகுதியையும் கபளீகரம் பண்ணும் யானைப்பசியுடன் இயங்குவது மட்டுமன்றி, உலகப்படத்தின் ஒவ்வொரு நாட்டையும் தங்களின் சுண்டுவிரலுக்குள் கட்டுப்படுத்திக்கொண்டும் இருப்பவர்கள்.
மூன்றாவது பிரிவினர் உலகின் கிழக்குப் பகுதியில் காணப்படும் பல்வேறு புவியியல், தத்துவம், உயிரியல், சமயம், காலநிலை வேறுபாடுகளை தன்னகத்தே கொண்ட மக்கள் தொகுதியினர். இவர்கள் காலாகாலமாக மேற்கூறிய வேறுபாடுகளுக்குள் தங்களுக்கிடையே மரபார்ந்த உட்பகைகளுடன் வாழும் மக்கட் தொகுதியினர். 19ஆம் நூற்றண்டுவரை மேற்சொன்ன ஐரோப்பியரதும் அவர்களின் மூக்கணாங் கயிற்றை பிடித்திருப்பவர்களதும் மூளைச்சலவைக்கு அவர்கள் பெருமளவில் உட்பட்டு இருக்காதவர்களாயும் அதேவேளை அறியாமை, வறுமை முதலிய இலக்கணங்களைக் கொண்டவர்களாயும் வாழ்ந்து வருபவர்கள். இவர்களை எமது வசதிக்காக கிழக்கத்திய (Eastern) கலாசாரத்தில் இருப்பவர்கள் என அழைக்கலாம்.
இந்த கிழக்கத்திய கலாசாரப் பிரிவினருள்ளும் இரண்டு வேறுபாடான அம்சங்கள் காணப்படுகின்றன. அவர்களுள் சிலர் ஐரோப்பியரின் வெள்ளையர் என்ற கணிப்புக்கு உட்படாத வெள்ளை நிறத்தவர்கள். கிழக்கத்தைய பண்பான வறுமை, அறியாமை என்பன ஓரளவுக்குத்தான் அவர்களிடம் மேலோங்கிக் காணப்படும். இஸ்லாமோபோபியா என்ற நவீன சதிவலைக்குள்ளே அவர்கள் மிக அண்மையில்தான் இழுத்துவிடப்பட்டுள்ளார்கள். கிழக்கு ஆசியா எங்கணும் இவ்வகையான மக்களை நாம் அடையாளம் காண முடியும்.
இவர்களுள் இன்னொரு பிரிவினர் அந்த அந்த நாடுகளின் சுதந்திரப் போராட்டம் முடிவுக்கு வந்ததன் பின்னர் உருவாக்கப்பட்டு புதிய அகன்ற தேசியவாத சிந்தனையுடன் களமிறக்கப்பட்டவர்கள். ஒரு பாரிய அகன்ற பாரத கனவை ஒத்த கனவுகளுடன் தத்தமது நாட்டின் அதிகார அரசியலில் மிகுந்த செல்வாக்குச் செலுத்தி வருபவர்கள். இவர்கள் முஸ்லிம்களை மட்டுமன்றி கிறிஸ்தவர்களையும் கூட துவம்சம் செய்யும் நோக்குடன் கருநாகங்களாக வலம்வருபவர்கள்.
இவ்விடத்தில் மட்டுமே இத்தகையோர் வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளுடன் முரண்பட்டுக் கொள்கின்றனர். அத்தகையோர் தத்தம் சொந்த நாடுகளில் பலமான மதவாத அரசு ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் விதேசிய சமயத்தவர்களான கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அப்புறப்படுத்தும் கனவுடனும் உலகின் வரைபடத்திலிருந்து முஸ்லிம் நாடுகளை இல்லாமல்செய்யும் தீவிர குறிக்கோளுடனும் இயங்கி வருபவர்களுடன் மிகுந்த தோழமை கொண்டவர்கள்.
மேற்படி மூன்று சக்திகளுள் முதலிரு சக்திகளும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஒரு முக்கிய கண்டுபிடிப்பை போர்த்தந்திர துறையில் கண்டுபிடித்துள்ளன. அதாவது முஸ்லிம் நாடுகளை உலகப் படத்திலிருந்து விரட்டியடிக்க தாங்கள் ஏற்கனவே கைக்கொண்ட அத்தனை போர்த் தந்திரங்களும் இறுதியில் பெரும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன என தற்போதைக்கு அவர்கள் கருதுகின்றார்கள். இத்தோல்விக்கு அடிப்படைக் காரணம் மரபுரீதியான போர் தந்திரோபாயங்கள் என்பதே இவர்கள்தம் கண்டுபிடிப்பு. தங்களின் மரபுரீதியான போர் தந்திரோபாயங்கள் அவர்கள் அழிக்க நினைக்கும் மக்களை ஒழிப்பதற்குப் பதிலாக, அவர்கள் மற்றுமொரு வகையில் மீளெழுச்சி காண சந்தர்ப்பத்தை அளித்து விடுகின்றது என்பது அதன் விளக்கம்.
இந்தத் தந்திரோபாயங்கள் இறுதியில் முஸ்லிம்களைப் பிரித்து ஓரளவு அழித்தாலும் வேறொரு வழியில் அவர்களை சக்திப்படுத்தியுள்ளன என்பதே அவர்களின் ஆய்வுகளின் முடிவாகும். அத்தோடு வல்லரசுகள் தங்களுக்குள்ளே மோதிக்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் முஸ்லிம் நாடுகள் மேலும் தங்களை வளப்படுத்திக் கொள்கின்றன என்பதும் அவர்களது கணிப்பாகும்.
அதற்கு உதாரணமாக அவர்கள் குறிப்பிடுவது அமெரிக்கா என்ற வல்லரசு தனது எதிர் முகாமைச் சேர்ந்த மற்றுமொரு வல்லரசான சோவியத் யூனியனை துண்டாடுவதில் பெற்ற வெற்றி. இதன்மூலமாக இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பற்பல புதிய நாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெற்றிக்குப் பதிலாக சர்வதேச முஸ்லிம் நாடுகளை மேலும் சக்திப்படுத்தியுள்ளது என்பதும் அவர்கள் கருத்தாக இருக்கிறது. இது முஸ்லிம்கள் மீண்டும் உதுமானிய சாம்ராச்சியத்தை நோக்கி தங்களை ஆற்றுப்படுத்த வழிவகை செய்துள்ளதாகவே அவர்கள் கருதுகின்றனர். இதன்பொருட்டு அவர்கள் கோடிட்டுக் காட்டும் ஆகப்பிந்திய உதாரணம் துருக்கியின் புலமைத்துவ வழிகாட்டலில் மலேசியா, இந்தோனேசியா, கட்டார் முதலிய நாடுகளிடையே அண்மையில் ஏற்பட்டுள்ள கருத்தியல் ஒருமைப்பாடு.
பெருந்தேசியவாத அடிப்படையில் சமபலம்கொண்ட மற்றுமொரு வல்லரசை அவர்கள் வீழ்த்தியபோதிலும்கூட, அதனை ஒரு தற்கொலை முயற்சி என்றே அமெரிக்க ஏகாதிபத்தியம் தற்போது கருதுகின்றது.
எனவே, முஸ்லிம் வல்லரசு ஒன்று இந்த நூற்றாண்டில்கூட ஏற்படாமல் தடுக்கவேண்டின், மரபு ரீதியான யுத்த முறைகள் தவிர்க்கப்படவேண்டும் என அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அதன் புலமைத்துவ ஆலோசகர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பரிந்துரையில் முஸ்லிம்களை அவர்களின் பலவீனங்களுக்குள்ளே பிரயாணம் செய்தே வெற்றிகொள்ள வேண்டும். அதற்கு சிறந்தவழி அவர்களுக்கிடையே காணப்படுகின்ற முக்கிய ஆன்மீக மற்றும் கலாசார வேறுபாடுகளுக்கு ஊடாக அவர்களுக்கிடையே புதிய வன்மங்களை வளர்த்துவிட வேண்டும் என்றும் தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு ஒரு தொடர்ச்சியான தகவல் தொடர்பாடல் யுத்தத்தையும் முஸ்லிம் நாடுகளுக்கிடையே சீரிய முறையில் கொண்டு நடத்தவேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களிடையே ஒரு சிந்தனைக் குழப்பத்தை உருவாக்கி அதன்மூலம் ஒரு கருத்தியல் பலவீனத்தை அவர்களிடையே வளர்த்துச்செல்ல முடியும்.
அவர்களின் இந்தக் கண்டுபிடிப்புக்கு 1979 பெப்ரவரியில் ஈரானில் நிகழ்ந்த இஸ்லாமியப் புரட்சி மேலும் உத்வேகத்தை அளித்தது. அமெரிக்காவுக்கும் அதன் அடிவருடியான ஷா மன்னர்களின் இஸ்லாமிய விரோத கேடுகெட்ட ஆட்சிமுறைக்கும் எதிராக முழு ஈரானுமே புதியதோர் புரட்சியின்பால் அப்போது ஈர்க்கப்பட்டிருந்தது. அதன் போராட்டம் ஆன்மீகத் தலைமையான இமாம் ஆயதுல்லாஹ் கொமெய்னியின் ஆகர்ஷிப்புடன் மக்கள் புரட்சியாக மட்டுமன்றி இஸ்லாமிய அரசைத் தோற்றுவிப்பதற்கான புரட்சியாகவும் மாற்றப்பட்டது. ஷா மன்னரின் இந்த தோல்வியையும் ஆட்சிக் கவிழ்ப்பையும் அமெரிக்காவும் மற்றும் பன்னாட்டு யஹூதிய ஊடகங்களும் தங்களின் தோல்வியாகவுமே கருதின.
சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஒருபுறமும் ஈரானிய இஸ்லாமிய புரட்சியின் எதிர்பாராத வெற்றி மறுபுறமும் அமெரிக்காவையும் அதன் நேசநாடுகளையும் கிலிகொள்ளச் செய்தது. இதனால் பழைய பனையோலையை சுருட்டி எறிந்துவிட்டு புத்தம்புதிய தந்திரோபாயங்களை கடைப்பிடித்தாக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் ஆரம்பத்தில் புதியதோர் தந்திரோபாய பாய்ச்சலை அவர்கள் முஸ்லிம்கள்மீது ஏவிவிட்டனர்.
இஸ்லாமியப் புரட்சி என்ற புதிய நாமத்துடன் ஏகாதிபத்தியத்தின் ஏவல்களை விரட்டியடித்த சக்திமிக்க மாற்றத்துக்குப் பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் வாழ்ந்த மக்கள் ஒரு கருத்தியல் ரீதியான அங்கீகாரத்தை அந்தக்கட்டத்தில் வழங்கினர்.
மட்டுமன்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நாடுகளும் மற்றும் உலகெங்கும் சிறுபான்மையினராகச் சிதறிவாழும் நாடுகளில் ஆங்காங்கே தோன்றிய இஸ்லாமிய புலமைத்துவ அறிஞர்களும் இதுபற்றிய உடன்பாடான ஓர் அபிப்பிராயத்தையே கொண்டிருந்தனர். (இஸ்லாமியப் புரட்சி அதன் எதிரிகளால் ஷீஆ புரட்சி என அழைக்கப்பட்டதும் பல ஈரானிய குடிமக்களால் அது அரபிகளுக்கு எதிரான பாரசீக தேசியப் புரட்சியாக மாத்திரம் கருதப்படுவதும் பின்னாளில் தோன்றிய துர்ப்பாக்கியமான நிகழ்வுகள்) எனினும் ஈரானியப் புரட்சியானது ஏகாதிபத்தியவாதிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே அழித்தது. அதன் உடனடி விளைவாகவே அவர்களுக்குள்ளே அவர்களை மோதவிடல் எனும் யுக்தி ஈரான் - ஈராக் யுத்தத்துடன் ஏலத்துக்கு வந்தது.
பிராந்திய வல்லரசுக் கனவுகளுடன் நடைபயின்ற ஈராக் ஆட்சியாளரின் கண்களை இஸ்லாமியப் புரட்சி ஒன்று உலகில் ஏற்பட்டே ஆகவேண்டும் என்ற சிந்தனை ஒரு திரிபுக் காட்சியாகவே தோன்றிற்று. எனினும் ஏகாதிபத்தியத்தின் அனுசரணையுடன் ஈரான்மீது ஈராக்கினால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஈரானின் நெஞ்சுரத்தினால் படுதோல்வியையே கண்டது. ஆனால் ஏகாதிபத்தியத்துக்கு கிடைத்த ஆதாயம் இரண்டு நாடுகளிலும் ஏற்பட்ட பாரிய உயிர் மற்றும் பொருளாதார அழிவுகளாகும்.
ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக தொழிற்பட்ட ஈராக்கிய அதிபர் காலகெதி யில் அதே ஏகாதிபத்தியத்தின் வன்மம் மிக்க எதிரியாய் ஆக்கப்பட்டார். பின்னாட்களில் பாரசீக வளைகுடாவின் ஒரு பலமிக்க சக்தியாக வளர்ச்சி கண்ட ஈராக்கிய அதிபரை அழித்தொழித்த பின்னர்தான் ஏகாதிபத்தியம் நிம்மதியாக மூச்சுவிட்டது. வளைகுடாவில் அவர்களுக்கு எதிரான ஒரு பலமிக்க திரட்சியை ஏகாதிபத்தியம் மிகக்கவனமாக அணுகி சின்னாபின்னம் ஆக்கிவிட்டது.
இந்த தலைகீழ் விகிதம் சமகால இஸ்லாமிய வரலாற்றில் அமெரிக்காவையும் அதன் நேசத்துக்குரிய முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத நாடுகளையும் இஸ்லாமிய புலமைத்துவ அறிஞர்களால் வகைப்படுத்தி உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்ட வழிவகுத்தது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக்கு எதிராக ஈராக்கிய அதிபர் மூலமாக தொடுத்த போர் தோல்வியடைந்ததன் பின்னர்தான் அவர்கள் சகோரத்துவ முரண்பாடுகளை கூராக்குவதில் முனைப்புக்காட்டினர்.
பிற்போக்குவாதிகளின் புலமைத்துவ அறிஞர்கள் இஸ்லாமிய இறையியல் பிரிவுகளுக்கு இடையிலான வேறுபாடுகளையும், இஸ்லாமியர்களாக இருந்தும் அவர்களுக்கு உள்ளே புரையோடிப்போயிருக்கின்ற புவியியல் மற்றும் இனத்துவ அடிப்படையிலான கலாசார மற்றும் மரபுசார் வேறுபாடுகளையும் பற்றி கணிசமான ஆய்வுகளை மேற்கொண்டனர். முஸ்லிம்களிடையே காணப்பட்ட உயிரியல் மற்றும் நடப்பியல் வேற்றுமை உணர்வுகளை மேலும் கூராக்கி அதனை மாமிசப் பகைகளாக மாற்றும் யுக்தியை அந்த ஆய்வுகளின் மூலமாக மேற்குலகு கையாண்டது.
ஆயத்துல்லாஹ் கொமெய்னியின் தலைமையிலான இஸ்லாமியப் புரட்சி நடைபெறும் வரை சவூதி அரேபியாவும் ஈரானும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒன்றுபட்ட சேவகர்களாகவே இருந்தன.
ஆனால், இஸ்லாமியப் புரட்சியின் பின்னர் ஈராக்கிய அதிபரின் படையெடுப்பால் ஈரானை அசைக்க முடியாத நிலைமை தோன்றியபோது அராபிகளுக்கும் பாரசீகர்களுக்கும் இடையில் காணப்பட்ட கலாசார வேறுபாட்டையும் இறையியல் ரீதியான ஷீஆ - ஸுன்னி வேறுபாட்டையும் தோண்டியெடுத்து அவர்களை மோதவிட்டனர். காலக்கெதியில் அந்த இரண்டு தரப்பினரிடமும் அது நன்கு பற்றியெரிய ஆரம்பித்தது. இதனால் மேற்குலகின் இரவு விடுதிகள் சந்தோஷ கானங்களாலும் நுரைகக்கும் பானங்களாலும் நிரம்பி வழிந்தன.
இந்த வெற்றியின் பின்னர் இஸ்லாமிய நாடுகளிலுள்ள அடையாளப்படுத்தப்பட்ட பிற்போக்கு சக்திகளின் முழுமையான ஆதரவுடன் இஸ்லாமிய இறையியலை அடிப்படையாகக்கொண்ட முஸ்லிம் நாடுகளுக்கிடையே ஏகாதிபத்தியம் தொடர்ச்சியான மோதல்களை திட்டமிட்டு ஏற்பாடுசெய்து வருகின்றது. அமெரிக்க மற்றும் யஹூதிய சக்திகளுக்கு குற்றேவல் செய்துவரும் சக்திகளுடன் இந்த கைங்கரியத்தை அவர்கள் கச்சிதமாக அரங்கேற்றி வருகின்றனர்.
அடையாளப்படுத்தப்பட்ட பிற்போக்கு சக்திகள் ஓர் இறையியல்சார் தத்துவார்த்த அடிப்படையிலான சக்திப்படுத்தல் என்ற போர்வையில் உலகமெங்கும் இந்த வேற்றுமைத்தீயை முஸ்லிம்களுக்கிடையே வளர்த்துவிட பாவிக்கப்பட்டன.
இதற்கு சர்வதேச அரசியலில் ஒரு பிற்போக்கு நிலைப்பாட்டைக் கடைப்பிடித்த ஆட்சியாளர்களும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளுக்கு துணைநின்ற சக்திகளும் தங்களின் பெற்றோலிய டொலர்களை தாராளமாக செலவிட்டன. அவர்களின் பல்கலைக்கழகங்கள் இந்த வேறுபாட்டை அறிவியலாக்கி ஏனைய நாடுகளுக்கு பெற்றோலிய டொலர்களுடன் கூடிய அவர்களின் கருத்தியலை ஏற்றுமதி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டன.
இத்தகைய கருத்தியல் விதைப்பு காலக்கெதியில் அறிவின் மென்மையான உணர்வுகளை புறந்தள்ளிய இறையியல் கடும்கோட்பாட்டாளர்களை இந்தப்பூமி எங்கும் உருவாக்கிற்று. இவர்கள் மனித நாகரிகத்தின் குணங்களை உதறித்தள்ளியவர்கள் என்றும் இஸ்லாம் என்பது ஒரு வக்கிரமான சிந்தனைகொண்ட ஒரு மார்க்கம் என்றும் ஓர் எண்ணம் ஏனையோரிடம் எளிதில் உருவா வதற்கான காரணிகளாகிவிட்டனர். இஸ்லாம் என்ற மார்க்கமானது மக்களின் மென்மையான உணர்வுகளை கருத்திற்கொள்ளாது ஒரு போர்க்குணம்மிக்க, பழிவாங்கும் இயல்புள்ள, ரத்தவெறிகொண்ட ஒரு கருத்தியலின் வழிமுறையாகும் என்று மாற்று மதத்தவர்களிடையே ஒரு நிரந்தரமான அபிப்பிராயத்தை அது உருவாக்கிற்று.
அதனால்தான் இலங்கையில் ஹிஸ்புல்லாஹ்வையும் சஹ்ரானையும் ஒற்றை நேர்கோட்டில் வைத்துப்பார்க்கும் அறிவியல் எழுச்சியை இலங்கையின் ஊடகங்கள் செய்யத் தொடங்கின. அந்த வெற்றி தந்த உற்சாகத்தில்தான் ரவூப் ஹக்கீம் போன்ற புலமைத்துவ தலைமைகளைக்கூட அவை இன்று கடும்கோட்பாட்டாளர்களாக காட்ட முனைந்துள்ளன.
ஒரு நூற்றாண்டுகால அடிமைத்துவத்திற்கு எதிராக போரிடும் பலஸ்தீனத்தின் அறப்போராளிகளையும் தற்போது வேதப்பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கும் வக்கிர புத்திக்காரர்களையும் ஒரே புள்ளியில் வைத்துப்பார்க்கும் போக்கை இஸ்லாம் அல்லாதவர்களிடையே சர்வதேச ஊடகங்கள் ஆழமாக விதைத்துவிட்டன.
முஸ்லிம்களிடையே ஆங்காங்கு இந்த வக்கிரபுத்தி கொண்ட இறையியலாளர்களை தோற்றுவித்துவிட்டு பின்னர் இஸ்லாம் பற்றி தப்பபிப்பிராயமான சிந்தனைகளை அவை சர்வதேச மயப்படுத்தியுள்ளன. அதுவும்கூட ஏகாதிபத்தியத்துக்கு நற்பெயரை பெற்றுக்கொடுக்கவே உதவிற்று. அதனால்தான் இப்படிப்பட்ட கடும் கோட்பாட்டாளர்களை அமெரிக்க ஏகாதிபத்தியமே முன்னின்று பிரசவித்துள்ளது என்று இஸ்லாமிய புலமைத்துவ அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஏகாதிபத்தியத்தின் இந்த முயற்சியின் அடுத்தகட்டமாக சிறுபான்மையாக கிழக்காசிய மற்றும் தெற்காசிய நாடுகளிடையே வாழும் முஸ்லிம்களை அவர்களின் அடையாளம் சார் அனைத்து விழுமியங்களையும் சிதைத்துவிடும் ஒரு கடும்போக்கு நடைமுறையை இந்தக் கோட்பாட்டாளர்களைக் கொண்டு அரங்கேற்றியுள்ளனர். ஆரம்பத்தில் கபுறு (புதைகுழி) வணக்கத்தை ஒழித்தல் என்ற போர்வையில் வரலாற்று அடையாளங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இஸ்லாத்தின் எதிரிகளால் இதற்கும் ஒரு தத்துவார்த்த முலாம் பூசப்பட்டு மக்களிடையே குழப்பங்கள் தூண்டிவிடப்பட்டன.
பின்னர்தான் இந்த வேறுபாடுகளின் ஆதாயங்களை அந்தந்த நாடுகளின் பேரினவாதிகள் கையில் எடுத்தனர். அந்த பேரினவாதிகள் பள்ளிவாசல்களை அழித்தல், அடையாள ஆடை அணிகலன்களில் கைவைத்தல், பொருளாதார மூலங்களை நிர்மூலமாக்குதல், அனுபவித்துவரும் ஆன்மீக மற்றும் கலாசார உரிமைகளில் நேரடியாக இடையூறுகளை உருவாக்குதல் முதலிய அனைத்து வழிவகைகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிடையே தற்போது வன்மத்துடன் தாக்குதல்களை தொடுக்கின்றனர். இந்தியா, சீனா, இலங்கை, மியன்மார் முதலிய நாடுகளில் இந்தப்போக்கு அந்தந்த நாட்டு மக்களின் கலாசாரம் தொடர்பான சர்வதேசப் பார்வைகளுக்கேற்ப மிகக்கச்சிதமாக மேடையேற்றப்படுகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழீழப் போராட்டத்தை ஒடுக்கிய பின்னர் ஏற்பட்ட உற்சாகத்தினால் இந்தப்போக்கு பேரினவாதிகளால் வகை தொகையற்று முடுக்கிவிடப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21இன் பின்னர் ஒரு கட்டத்தில் எல்லா முஸ்லிம் மக்களுமே பயங்கரவாதிகளாகவே பிறத்தியார்களால் பார்க்கப்பட்டனர்.
இயேசுநாதரை ஈஸா நபி எனக்கூறி, அவரை ஒரு தீர்க்கதரிசியாக நம்பிக்கை கொள்ளாதவன் முஸ்லிம் அல்ல என்பதே இஸ்லாமிய இறையியலாகும். இந்த நம்பிக்கையினால் கிறிஸ்தவ இறையியலை ஒரு சகோதர வாஞ்சையுடன் அணுகும் இஸ்லாமியர்களும் பழைய ஏற்பாட்டில் குறித்துரைக்கப்பட்ட சில கோட்பாடுகளால் இஸ்லாத்தை ஒரு சகோதர மார்க்கமாகப் பார்க்கும் கிறிஸ்தவர்களும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலால் ஜென்மவிரோதிகள் ஆக்கப்பட்டுள்ளனர். சஹ்ரானின் இந்த கடும் கோட்பாட்டை எந்த முஸ்லிமும் ஆதரிக்கவில்லை என்பதை கிறிஸ்தவ மார்க்கத்தின் தலைவர்கள் சிறிது சிறிதாக இப்போது ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். அதேபோல முஸ்லிம்களில் ஒரு சதவிகிதத்தினர்கூட இந்தக் கொடுமைக்கு ஆதரவில்லை என்பதும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
அப்படியானால் இந்த வன்முறையால் ஆதாயம் பெற்றவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணவேண்டியதே வன்முறையை விரும்பாத மக்களினதும் அரசுகளினதும் முதன்மையான கடமை. இந்தப் புள்ளியிலிருந்தே இந்த அழிவுக் கலாசாரத்துக்கு ஓர் அறிவுசார் முற்றுப்புள்ளியை வைக்கமுடியும்; வைக்கவும் வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM