(ஆர்.விதுஷா)
சந்திரனின் நிழல் பூமியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வான சூரியகிரகணம் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை நிகழவுள்ளது.
இந்த நிகழ்வினை ஒன்பது வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக தெளிவாக பார்வையிடக்கூடிய வாய்ப்பு இலங்கை வாழ் மக்களுக்கு கிடைக்கவுள்ளது.
அந்த வகையில் வட மாகாணத்தில் முழுமையான சூரியகிரகணத்தை அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். குறித்த தினத்தன்று காலை 8.09 முதல் 11.21 வரையான காலப்பகுதியில் வடக்கில் சூரியகிரகணத்தை 90 வீதம் தெளிவாக அவதானிக்கக் கூடியதாகவிருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய சூரியகிரகணம் இறுதியாக கடந்த 2010 ஜனவரி மாதம் 15 ஆம் திகதியே தென்பட்டது. இருப்பினும் இம்முறை முழுமையான கிரகணத்தை இலங்கையர்கள் அவதானிக்கக் கூடிய வாய்ப்பு கிட்டவுள்ளது.
26 ஆம் திகதி நிகழவுள்ள கிரகணத்தை தொடர்ந்து இனிமேல் 2031 மே மாதம் 21 ஆம் திகதியிலேயே வடக்கைச் சேர்ந்த மக்களால் இதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சூரியகிரகணத்தை பார்வையிடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இருப்பினும் இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது மிகவும் ஆபத்தானதாகும் எனவும் வானியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை யாழ். பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பிரயோக விஞ்ஞான பிரிவு இணைந்து மேற்கொண்டுள்ளன.
அந்தவகையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் சூரிய கிரகண அவதானிப்பு முகாம்களும் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாறு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் கிரகணத்தை பார்ப்பதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்களுக்கு 2000 பிரத்தியேக பாதுகாப்பு கண்ணாடிகளும் வழங்கப்படவுள்ளன.
அதேபோல், கொழும்பு மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் காலை 8.09 முதல் 11.22 மற்றும் 11.23 மணிவரையிலும் பார்க்கலாம்.
அத்துடன் வவுனியா, மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு, அநுராதபுரம், கண்டி, மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களிலும் சூரியகிரகணத்தை பார்வையிடக் கூடியதாகவிருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM