(பாகிஸ்தான், கராச்சியிலிருந்து நெவில் அன்தனி)
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் முதலாவது ஆட்ட நேரப் பகுதியில 3 விக்கெட்களை இழந்தமை இலங்கை அணிக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
பகல்போசன இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தினேஷ் சந்திமால் 42 ஓட்டங்களுடனும் நிரோஷன் திக்வெல்ல 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் மீதமிருக்க பாகிஸ்தானைவிட 21 ஓட்டங்களால் மாத்திரமே இலங்கை பின்னிலையில் இருக்கின்றது.
இப் போட்டியில் நேற்றைய தினம் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்ளையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதலாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இன்று காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை, துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்தது. 7 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இராக்காப்பாளன் லசித் எம்புல்தெனிய, அநாவசியமாக மொஹமத் அபாஸின் பந்தை விசுக்கி அடிக்க விளைந்து அஸாத் ஷபிக்கிடம் பிடிகொடுத்து 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
சிறிது நேரத்தில் ஏஞ்சலே மெத்யூஸும் 13 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஷஹீன் ஷா அப்றிடியின் பந்துவீச்சைப் புரிந்துகொள்ள முடியாமல் விக்கெட் காப்பாளர் ரிஸ்வானிடம் பிடிகொடுத்து நடையைக் கட்டினார்.
தொடர்ந்த தினேஷ் சந்திமாலும் தனஞ்சய டி சில்வாவும் திறமையாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை சிரமமின்றி பெற்றவண்ணம் இருந்தனர்.
இருவரும் 6ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்;ந்திருந்தபோது ஷஹின் ஷா அப்றிடியின் பந்துவீச்சில் மொஹமத் அபாஸிடம் பிடிகொடுத்து 32 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் மொஹமத் அபாஸ் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM