இந்தியாவின் முதலாவது இளம் ஐ.பி.எஸ். அதிகாரியான குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் பாலன்புரின் கனோடர் கிராமத்தை சேர்ந்தவர் ஹசன் சபீன். வருமையான குடும்பப் பின்னணியை கொண்டிருந்த இவர் சிறுவயது முதல் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவதே தனது இலட்சியமாக கொண்டு செயற்பட்டுள்ளார். இவரது இலட்சியத்திற்கு வறுமை தடையாக இருந்த போதும், தாய் மற்றும் அயலவர்களின் உதவியுடன் சாதனை படைத்துள்ளார் ஹசன் சபீன்.
மகனின் படிப்பிற்கு உதவும் வகையில், அவரது தாயார் உணவகங்களுக்கு சப்பாத்தி செய்து கொடுத்து வந்துள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள தொழில் அதிபர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சபீன் படிக்க உதவி செய்துள்ளனர்.
முதல்முறையாக சிவில் சேவையாளர் தேர்வு எழுத சென்றபோது ஹசன் விபத்தில் சிக்கிய நிலையில் தேர்வு எழுதியுள்ளார். அதில் வெற்றி பெற முடியாது போனதையடுத்து, 2ஆவது முறையாக தேர்வு எழுதி ஐ.பி.எஸ். அதிகாரியாகி தமது இலச்சியத்தை நனவாக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 570ஆவது இடத்தை பெற்ற சபீன் ஐ.பி.எஸ்.ஆக தெரிவாகியுள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் 23ஆம் திகதி ஜாம்நகர் பொலிஸ் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் இளம் ஐ.பி.எஸ். அதிகாரி என்ற பெருமையை சபீன் பெற்றுள்ளார்.
தமது வெற்றி குறித்து சபீன் கூறுகையில்,
‘இந்த வெற்றியை நான் மட்டும் சொந்தம் கொண்டாட விரும்பவில்லை. நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பு தான் எனது வெற்றிக்கு காரணம்’ என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM