இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்திற்கு ‘ஜிந்தாபாத்’ எனப் பெயரிடப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தினை ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார்.
இப்படத்தில் நடிகர் அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை ஸ்டெபி பட்டேல் நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்போது ‘ஜிந்தாபாத் ’என பெயரிடப்பட விருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே நடிகர் அருண் விஜய் நடிப்பில் இந்த ஆண்டில் தடம் மற்றும் சாஹோ என இரண்டு படங்கள் வெளியானது. அத்துடன் அவர் தற்போது அக்னி சிறகுகள், மாபியா, பாக்சர், சினம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM