வாகன விபத்தொன்றினை அடுத்து, தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாரதியை மாற்றி, உண்மையை மறித்து சாட்சியங்களை சோடித்து நீதித் துறைக்கு மோசடி செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று இது குறித்த விவகாரம் கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்ப்ட்டது.
எதிர்வரும் 24 ஆம் திகதி சம்பிக்க ரணவக்கவுக்கு பிணை வழ்னக்குவதா அல்லது விளக்கமறியலை நீடிப்பதா என முடிவு எடுக்கப்படும் என மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா இதன்போது அறிவித்தார்.
இது குறித்த விவகார வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்ட போது, விசாரணையாளர்களான கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு சார்பில் அதன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா, பிரதான பொலிஸ் பரிசோதகர்களான பெர்னாண்டோ மற்றும் என்ஸ்டன் சில்வா ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.
அவர்களுக்கு வலு சேர்க்க சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் சிரேஷ்ட அரச சட்டவாதி சஹன்யா நரம்பனாவ ஆகியோரும் ஆஜரகைனர்.
சந்தேக நபர் சம்பிக்க ரணவக்க இன்று சிறை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் செய்யப்ப்ட்ட நிலையில், அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவின் கீழ் சிரேஷ்ட அரச சட்டவாதிகளான அஜித் பத்திரண , குணரத்ன வன்னிநாயக்க ஆகியோரின் கீழான சட்டத்தரனிகள் குழுவொன்று ஆஜராகியமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM