ரஷ்ய போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் சாதுரியமாகச் செயற்பட்டு விமானத்திலிருந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தவலை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் போர் விமானமான ‘டியூ-22எம்3’ ரக விமானம் நீண்ட தூரம் சென்று குண்டு வீசும் திறன் படைத்தது. இந்த விமானம் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வான்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவின் தெற்கு பகுதியிலுள்ள அஸ்டிரகான் பிராந்தியத்திலிருந்து ‘டியூ-22எம்3’ ரக விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காகப் புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் 2 விமானிகள் மட்டும் இருந்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் 2 என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்தது. இதனால் விமானிகள் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையைநோக்கி வேகமாகச் சென்றது.
அதனைத் தொடர்ந்து, விமானம் தரையை நெருங்கியபோது விமானிகள் இருவரும் அருகில் உள்ள ஒரு வயலில் குதித்தனர். அதன்பின்னர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானிகள் சாதுரியமாகச் செயற்பட்டு விமானத்தி லிருந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM