மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியை மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது போட்டி இன்றைய தினம் விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமானது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அதிரடியான ஆட்டத்தினால் 5 விக்கெட்டுக்களை இழந்து 387 ஓட்டங்களை பெற்றது.
388 ஓட்டம் என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 43.3 ஓவர்களை எதிர்கொண்டு 280 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 107 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.
மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் இவன் லிவிஸ் 30 ஓட்டங்களையும், ஷெய் ஹோப் 85 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 78 ஓட்டங்களையும், சிம்ரன் ஹெட்மேயர் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 4 ஓட்டங்களையும், நிக்கோலஸ் பூரண் 47 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்களையும், கிரோன் பொல்லார்ட் டக்கவுட்டுடனும், ஜோசன் ஹோல்டர் 11 ஓட்டங்களையும், கீமோ பவுல் 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களையும், கரி பியர் 21 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழக்க ஷெல்டன் கோட்ரல் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.
இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் குல்தீப் பாதவ் ஹெட்ரிக் சாதனை படைக்க, மொஹட் ஷமி 3 விக்கெட்டுக்களையும், ஜடேஜா 2 விக்கெட்டுக்களையும், சர்துல் தாகூர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்திய அணியின் இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM