சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு அணித் தலைவர்களும் கோல்டன் டக்கவுட் முறையில் ஆட்டமிழந்து சென்ற சம்பவம் மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் பதிவாகியுள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்றைய தினம் விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமானது.
இப் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடும்போது ராகுலின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய இந்திய அணித் தலைவர் விராட் கோலி 37.3 ஆவது ஓவரில் தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே போல்லார்ட்டின் பந்து வீச்சில் ரோஸ்டன் சேஸிடம் பிடிகொடுத்து எதுவித ஓட்டமின்றி கோல்டன் டக்கவுட்டுடன் வெளியேறினார்.
அதேபோல் மேற்கிந்தியத்தீவுகள் அணி துடுப்பெடுத்தாடி வரும்போது நிக்கோலஸ் பூரணின் ஆட்டமிழப்பையடுத்து, களமிறங்கிய அந்த அணியின் அணித் தலைவர் பொல்லார்ட் 29.3 ஆவது ஓவரில் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் மொஹமட் ஷமியின் பந்து வீச்சில் ரிஷாத் பந்திடம் பிடிகொடுத்து எதுவித ஓட்டமின்றி கோல்டன் டக்கவுட் முறையில் வெளியேறினார்.
இந் நிலையலை 387 என்ற மிகப் பெரிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணி சற்று முன்னர் வரை 41 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 261 ஓட்டங்களை பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM