அரசாங்கத்தின் நன்மையான விடயங்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் : சஜித்

Published By: R. Kalaichelvan

18 Dec, 2019 | 08:45 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மக்களுக்கு வாக்குறுதியளித்த நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க தேவையான நிதியை ஒதுக்கிக்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் பூரண ஆதரவை பெற்றுக்கொடுப்போம். அதற்காக அரசாங்கம் விரைவாக பாராளுமன்றத்தை கூட்டி அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டுமென  எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன் வரி குறைப்பின் மூலம் அரசாங்கத்துக்கு ஐந்நூறு மில்லியன்வரை வருமானம் இழக்கப்பட்டிருக்கின்றது என எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும்வகையில் மினுவங்கொடை பிரதேசத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் பலமுள்ள எதிர்க்கட்சியாக செயற்பட்டு நாட்டினதும் மக்களினதும் நன்மையான விடயங்களுக்கு அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.

எதிர்க்கட்சி என்ற காரணத்துக்காக அரசாங்கம் கொண்டுவரும் அனைத்து விடயங்களையும் எதிர்க்கும் குரோத அரசியலை நாங்கள் செய்யப்போவதில்லை.

அதேநேரம் மக்களுக்கும் நாட்டுக்கும் பாதிப்பான எந்த தீர்மானங்களை கொண்டுவந்தாலும் அதனை நிராகரிப்பதுடன் அதற்கெதிராக போராடுவோம்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது வேலைத்திட்டத்தைவிட எமது எதிர்த்தரப்பினரின் வேலைத்திட்டத்துக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு கிடைத்தது.

69இலட்சம் மக்கள் அந்த வேலைத்திட்டத்துக்கு ஆதரவளித்திருக்கின்றனர். அதனால் அந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மற்றும் நிவாரணங்களை அரசாங்கம் விரைவாக வழங்கவேண்டும்.

அதற்காக நிதியை ஒதுக்கிக்கொள்ள பாராளுமன்றத்தில் பூரண ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதனால் அரசாங்கம் விரைவாக பாராளுமன்றத்தை கூட்டி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11