அதிரடியான ஆட்டம் காரணமாக மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 387ஓட்டங்களை குவித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியை மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது போட்டி இன்றைய தினம் விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு ஆடுகளம் நுழைந்தது.
ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி தமது அதிரடியான ஆட்டத்தின் மூலம் விக்கெட் இழப்பின்றி இந்திய அணிக்காக ஓட்டங்களை சேர்த்தனர்.
அதன்படி இவர்கள் இருவரும் முதலாவது விக்கெட்டுக்காக 227 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்திய அணியின் முதல் விக்கெட் 36.6 ஆவது ஓவரில் வீழ்த்தப்பட்டது. அதன்படி ராகுல் 104 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் கோலி எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக்கவுட்டுன் வெளியேறினார்.
தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் அய்யருடன் கைகோர்த்தாடிய ரோகித் சர்மா 43.3 ஆவது ஓவரில் 138 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் அடங்கலாக 159 ஓட்டத்துடுன் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய ரிஷாத் பந்த் 16 பந்துகளில் 39 ஓட்டத்தை விளாசி ஆட்டமிழக்க 48.6 ஆவது ஓவரில் ஸ்ரேயஸ் அய்யர் 32 பந்துகளில் 53 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 387 ஓட்டங்களை குவித்தது.
கேதர் யாதவ் 17 ஓட்டத்துடனும், ஜடேஜா எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM