மன்னார் நானாட்டான் பிரதேச சபையில் கடமைபுரியும் வெளிக்கள தொழிலாளர் ஒருவர் கடமைக்கென வந்த நிலையில் காணாமல் போயிருப்பதாக முருங்கள் பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மன்னார் நானாட்டான் பிரதேச சபையில் கடமைபுரிந்து வரும் வெளிக்கள தொழிலாளரான அன்ரனி விமாலட் (வயது 29) என்பவர் கடந்த சனிக்கிழமை (14.12.2019) காலை கடமைக்கென நறுவலிக்குளத்திலுள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டு வந்துள்ளதாகவும், இவர் அன்று வழமையான தனது கடமைக்கு வரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் வீடு திரும்பாததால் இது சம்பந்தமாக முருங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபர் இன்று புதன்கிழமை வரை கண்டு பிடிக்கப்படவில்லையென இவரின் உறவினர் தெரிவித்துள்ளார்.
இவர் திருமணம் செய்து இரண்டு மாதங்கள்தான் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM