சிவனொளிபாதமலையை புனித பூமியாகப் பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பிளாஸ்டிக்,பொலுத்தீன் மற்றும் போதைப்பொருட்கள் பாவனைத் தடை செய்துள்ளபோதும் குறித்த பகுதியில் அதிகளவில் பாவனையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், நல்லத்தண்ணி நகர் மற்றும் மலைப் பகுதியில் வெற்றிலை மற்றும் சிகரட் விற்பனைக்குத் தடை செய்துள்ளபோதும் ஒரு சிலர் மிகவும் சூட்சமமான முறையில் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
இவர்களினால் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படும் சிகரட் ஒன்றை 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் இவர்கள் நாள் தோறும் மலை உச்சிக்குக் கொண்டு சென்று வருவதாகவும் குறிப்பிட்டனர்.
அத்துடன் நுவரெலியா மாவட்ட அரச அதிபரினால் இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இப்போது இக்கட்டளை மீறப்படுவதுடன் இவ்விற்பனையை மேலும் சிலர் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
ஆகவே ஜனவரி மாதத்தில் அதிகளவில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யாத்திரியர்களின் வருகைக்கு முன்னர் இவ்விற்பனையை உடன் உரிய அதிகாரிகள் கவனத்திற்கொண்டு முற்றாகத் தடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM