மனோ கணேசனுடன், நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் சந்திப்பு.!

Published By: Robert

03 Jun, 2016 | 12:51 PM
image

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் மற்றும் குழுவினர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, நாட்டின் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பிலான யதார்த்த நிலைமைகளை நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம், அமைச்சர் மனோ கணேசனிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் எனது நண்பர். கொழும்பில் வெள்ளை வான் மூலம் கடத்தல் உச்ச கட்டத்தில் இருந்த யுத்த பின்னணி காலத்தில் அவர் கொழும்பில் இலங்கையின் நோர்வே தூதுவராக இருந்தார். அப்போது அவர் எனக்கு பெருந்துணையாகவும் இருந்துள்ளார்.  வடக்கில் கிழக்கில் சொல்லொனா துன்பங்களை சந்தித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ் மக்களின் மீள் குடியேற்றம், காணிகள் மீள் ஒப்படைப்பு ஆகியவை தொடர்பில் உண்மை நடப்புகளை அவருக்கு நான் எடுத்து கூறினேன். அத்துடன் புதிய அரசியலமைப்பு செயற்பாடு தொடர்பிலும் அவர் உரையாடினார். அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் தொடர்பாகவும் அவர் கேட்டு தெரிந்துக்கொண்டார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையும், தமிழ் அரசியல் தலைமையும் வடக்கு, கிழக்கிலும், தென்னிலங்கையிலும் ஒருசேர மையம் கொண்டிருப்பதையும், தெற்கில் வாழும் தமிழர்களின் அரசியல் தலைமையாக இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாகி உள்ளதையும் அவருக்கு நான் எடுத்து கூறினேன். தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் மக்களின் தலைமை கட்சிகளுடனும் இணைந்து தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு மூலமான தீர்வு, தேர்தல்முறை மாற்றம், நாட்டின் ஆட்சி முறைமை ஆகிய முக்கிய விவகாரங்கள் தொடர்பில் உறுதியாக செயற்பட்டு வருவதையும் டோர் ஹட்ரெமுக்கு நான் விளக்கி கூறினேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22