இங்கிலாந்தில் மொடல் அழகி தமரா மாளிகையில் நுழைந்த மர்ம நபர்கள் 470 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்த ‘பார்முலா 1’ குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி பெர்னி எக்லெஸ்டோனின் மகள் 35 வயதான தமரா எக்லெஸ்டோன் . இவர் பிரபல மொடல் அழகி.
குறித்த பெண்ணுக்கு லண்டனின் கென்சிங்டன் நகரில் 55 அறைகளைக் கொண்ட ஆடம்பர சொகுசு மாளிகை உள்ளது. இந்நிலையில், அவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வருகிறார்.
தமரா எக்லெஸ்டோன் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை பின்லாந்து நாட்டுக்குச் சென்றார்.
இந்நிலையில், இதனை அறிந்த கொள்ளையர்கள் 3 பேர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தமரா எக்லெஸ்டோனின் மாளிகைக்குள் புகுந்து, அவரது படுக்கையறையிலிருந்து சுமார் 50 மில்லியன் பவுண் மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். தனது மாளிகையில் நகைகள் கொள்ளைபோனது தொடர்பாக மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தமரா எக்லெஸ்டோனின் இந்த மாளிகையானது 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும். மேலும் மாளிகை அமைந்துள்ள வீதியில் பொலிஸார் இரவும், பகலும் சுற்றிவளைப்பு பணியில் ஈடுபடுவதோடு, அங்குப் பல சோதனை சாவடிகளும் நிறைந்துள்ளன. ஆனால் அத்தனை பாதுகாப்புகளையும் மீறி கொள்ளையர்கள் மாளிகைக்குள் புகுந்து நகைகளைக் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM