பதவிகளுக்காக ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் பிளவடையாது  - சஜித் 

Published By: R. Kalaichelvan

17 Dec, 2019 | 08:57 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தமையால் பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.அந்த வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு பரந்துபட்ட கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச பதவிகளுக்காக ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் பிளவடையாது என்றும் குறிப்பிட்டார்.

தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுவதற்காக ஒவ்வொரு தொகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்புக்களில் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று கொலன்னாவையில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். 

இதன் போது உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார்.

இதன் போது கொலன்னாவை தொகுதியில் தனக்கு வாக்களித்த 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், பொதுத் தேர்தலிலும் இந்த ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது : 

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதவியிலிருந்து விலகினேன். நாம் பதவிகள் மீது மோகம் கொண்டு அரசியலில் ஈடுபடுபவர்கள் அல்ல. எனவே பதவிகளுக்காக ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சி பிளவு படாது என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன். 

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தமையால் பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றியை நோக்கிய பயணத்திற்கு தலைமை வகிக்க நான் தயாராக இருக்கின்றேன். 

ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல்வேறு அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க அவர்களுடன் இணைந்து ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு தயாராக இருக்கின்றோம். இந்த போராட்டங்களுடன் புது முகங்களையும் புதுக் கொள்கைகளையும் இணைத்துக் கொள்வோம். 

எதிர்க்கட்சியாக நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் சிறப்பாக நிறைவேற்றுவோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35