2020 இல் முன்னோக்கிப் பயணிப்பதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தவிருக்கிறோம் - ரணில் 

Published By: R. Kalaichelvan

17 Dec, 2019 | 07:42 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நாம் ஒரே இடத்திலேயே தேங்கி நிற்கமுடியாது. எமது குறைபாடுகள் என்னவென்பதைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்துகொண்டு அடுத்தகட்டம் நோக்கிப் பயணிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரவித்தார்.

அதன்படி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நாம் முன்னோக்கிப் பயணிப்பதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தவிருக்கிறோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அச்சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

பல்கலைக்கழகங்களில் உள்ள எமது நாட்டின் இளைய தலைவர்களைச் சந்திப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் எம்மால் ஒரே இடத்தில் தேங்கிநிற்க முடியாது. 

அந்தவகையில் தற்போது பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் எம்மை வந்து சந்திப்பதுடன், அவர்களுடைய ஆலோசனைகளையும் முன்வைத்து வருகின்றனர். அதன்படி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நாம் முன்னோக்கிப் பயணிப்பதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தவிருக்கிறோம்.

நாம் எமது குறைபாடுகள் என்னவென்பதைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்துகொண்டு முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். நான் எப்போதும் இப்பதவியில் தொடர்ந்து இருக்கமாட்டேன்.

எனவே தற்போது புதிய தலைமைத்துவம் ஒன்றைக் கொண்டு வரவேண்டியிருக்கிறது. அதேபோன்று ஒருவருக்கொருவர் முரண்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து பொருத்தமான எதிர்காலத்திட்டத்தை வகுக்குமாறும் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57