கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு பயணித்த பஸ்ஸியில் ஹரோயின் போதைப்பொருளை கடத்திய இருவரை இன்று திங்கட்கிழமை இரவு(16) மட்டக்களப்பு சத்திருக் கொண்டான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களிடம் இருந்து 988 மில்லக்கிராம் ஹரோயினை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக தெரிவித்தனர்
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான (16) நேற்று மாலை சத்துருக் கொண்டான் பகுதியில் உள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் காத்திருந்தனர்.
இந்த நிலையில் கொழும்பில் இருந்து மட்டு காத்தான்குடிக்கு பயணித்த இலங்கை போக்குவரத்து பஸ்ஸை நிறுத்தி குறித்த இருவரை சோதனையிட்டபோது ஒருவர் தனது மலம்கழிக்கும் பகுதியிலும் மற்றவர் நீள்காச்சட்டை பொலிற்றில் ஹரோயிணை மறைத்து எடுத்து வந்ததை கண்டுபிடித்ததுடன் இருவரிடமிருந்து 988 மில்லிக் கிராம் ஹரோயினை மீட்டதுடன் இருவரையும் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரிடம் ஒப்படைத்தனர்
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஏறாவூர் தாமரைக்கேணி மீச்சு நகரைச் சேர்ந்த 30 வயது மற்றும் 20 வயதுடையவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM