(எம்.மனோசித்ரா)
பயிரிடப்படும் தென்னையில் சுமார் 10 வீதம் வன விலங்குகளால் அழிவுக்குள்ளாவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிவகைகள் குறித்து பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண கவனம் செலுத்தியுள்ளார்.
அமைச்சர் பத்திரண கடந்த வாரம் தென்னை கைத்தொழிலை பாதுகாக்கும் அமைப்பின் உறுப்பினர்களுடன் தென்னை பயிர்ச்செய்கையை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார். இந்த கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் அமை ச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த கலந்துரையாடலில் தென்னங் கைத்தொழிலை மேம்படுத்துவது தொடர்பாகவும் தென்னை கைத்தொழிலாளர்களு க்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக் கும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
தென்னங் காணிகள் துண்டாடப்படும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுவதாகவும் இவ்வாறு காணிகள் துண்டாடுவதை கட்டுப்படுத்த கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டது.
இது தொடர்பாக தேயிலை மற்றும் தென் னங் காணிகளை துண்டாடுவதை கட்டுப்படுத்தும் சபையினால் சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறார். அதேபோன்று தற்போது அனுமதியின்றி துண்டாடுவதற்கு இடமளிக்கப்படும் தென் னங் காணிகளுக்கான அதிகபட்ச வரையறையை 10 ஏக்கரிலிருந்து 05 ஏக்கர்களாக குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்வதற்கும் அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
பயிரிடப்படும் தென்னையில் சுமார் 10 வீதம் வன விலங்குகளால் அழிவுக்குள்ளாவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிவகைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதற்காக பயிரிடப்படும் தென்னங்கன்றுகள் வளரும் வரை முறையாக பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தென்னை மரங்களை வெட்டுவதை கட்டுப்படுத்தும் சட்டத்தையும் உடனடியாக திருத்தவும் தற்போது அனுமதியின்றி வெட்டுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ள பலா, ஈரப்பலா, பனை ஆகிய மரங்களுடன் தென்னை மரங்களையும் உள்ளடக்குமாறு தென்னங் கைத்தொழிலை பாதுகாக்கும் அமைப்பினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தென்னங்கன்றுகள் வளரும் பருவத்தில் அக்கன்றுகளை அழித்துவரும் சிவப்பு நிற வண்டுகளின் பிரச்சினையை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அமைச்சரினால் அமைச்சின் மேலதிக செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்ப டாத எண்ணெய்யின் அளவு அதிகரித்துள்ளது. எனினும் சுதேச தென்னை பயிர்ச்செய்கையை பரவலாக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு தென்னைக் கைத் தொழிலை பாதுகாக்கும் அமைப்பிடம் கோரிக்கை விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM