அபி­வி­ருத்தி மூலமே இன ஐக்­கியம் : சமஷ்டி, அதி­கா­ரப்­ப­கிர்வு என்று கூறி மக்­களை ஏமாற்ற முடி­யாது என்­கிறார் ஜனா­தி­பதி கோத்தா

Published By: R. Kalaichelvan

17 Dec, 2019 | 11:23 AM
image

சமஷ்டி, அதி­கா­ரப்­ப­கிர்வு என்று கூறி மக்­களை தொடர்ந்தும் ஏமாற்ற முடி­யாது. கடந்த 70 வரு­டங்­க­ளாக  அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்து கூறியே மக்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். பெரும்­பான்மை மக்கள் விரும்­பா­ததை செய்ய முடி­யாது. பெரும்­பான்மை  மக்கள் எதிர்க்கும் விட­யத்தை  நடைமுறைப்­ப­டுத்த முடி­யாது.

இதனைத்  தெரிந்­து­கொண்டும் அர­சியல் தலை­வர்கள் மக்­களை  ஏமாற்றி வந்­துள்­ளனர். அபி­வி­ருத்­தியின் மூலமே இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மை­யையும் சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்த முடியும்.   அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்து பேசி பய­னில்லை. அபி­வி­ருத்­தியின் ஊடா­கவே இன ஐக்­கி­யத்தை  ஏற்­ப­டுத்­தலாம் என்று  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி  செய­ல­கத்தில் தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ சந்­தித்து  நேற்று கலந்­து­ரை­யா­டினார்.  இந்த  கலந்­து­ரை­யா­டலில்  ஜனா­தி­ப­தியின்  ஊடக பணிப்­பாளர் மொஹான் சம­ர­நா­யக்­கவும் கலந்­து­கொண்டார்.  இங்கு  கேள்­வி­க­ளுக்கு  பதி­ல­ளிக்­கை­யி­லேயே  ஜனா­தி­பதி இவ்­வாறு  தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மேலும் கருத்து தெரி­விக்­கையில்  கூறி­ய­தா­வது;

கேள்வி: தேசிய பாது­காப்பு விட­யத்தில் அக்­கறை செலுத்­து­கின்­றீர்கள்.  இனங்­க­ளுக்­கி­டையே  நல்­லி­ணக்கம்  ஏற்­ப­டுத்­தப்­பட்­டால்தான்  தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த முடியும், கடந்த தேர்­தலில் வடக்கு, கிழக்கு  மக்­களின் வாக்­க­ளிப்பில் இடை­வெ­ளி­நி­லைமை  காணப்­ப­டு­கின்­றது.  இனங்­க­ளுக்­கி­டையே  நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த எத்­த­கைய  நட­வ­டிக்­கை­களை எடுக்­கப்­போ­கின்­றீர்கள்?

பதில்: இனங்­க­ளுக்­கி­டையே  ஒற்­றுமை  மற்றும் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மானால்  நாட்டின் பாது­காப்பு என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.  நாட்டின்  பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தா­விட்டால்  இனங்­க­ளுக்­கி­டையே ஒற்­றுமை  மற்றும் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது. பாது­காப்பு செய­லா­ள­ராக  நான் முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரியை நிய­மித்­தி­ருக்­கின்றேன். புல­னாய்வு   பிரி­வி­ன­ரையும்  பலப்­ப­டுத்­தி­யுள்ளேன்.  முப்­படைத் தள­ப­தி­க­ளுக்கும் உரிய பணிப்­பு­ரை­களை  விடுத்­தி­ருக்­கின்றேன். நாட்டின் பாது­காப்பை  உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு   செயற்­திட்­டங்கள்  மேற்ெள்­ளப்­பட்­டுள்­ளன.  

ஜனா­தி­ப­தி­யாக பதி­யேற்­ற­பின்னர் ஆற்­றிய உரை­யின்­போது தமிழ், முஸ்லிம் மக்கள்  எனக்கு  வாக்­க­ளிக்­க­வில்லை என்­றாலும்   நான்  நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் ஜனா­தி­ப­தி­யாக செயற்­ப­டுவேன்.   தமிழ் , முஸ்லிம் மக்கள் என்­னுடன் ஒன்­றி­ணைந்து பணி­யாற்ற முன்­வ­ர­வேண்டும் என்று நான் அழைக்­கின்றேன் என தெரி­வித்­தி­ருந்தேன்.

எம்­முடன்  ஒரே­யொரு தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரே இருக்­கின்றார்.  அவர்தான்  டக்ளஸ் தேவா­னந்தா  அவ­ருக்கு தேசிய ரீதி­யி­லான அமைச்சு  நான் கொடுத்­துள்ளேன்.  இது­வரை அவ­ருக்கு பிராந்­திய ரீதி­யி­லான அமைச்­சுக்­களே வழங்­கப்­பட்­டு­வந்­தன.  ஆனால் நான் மீனவ அமைச்சை   வழங்கி  தேசிய ரீதியில்   செயற்­ப­டு­வ­தற்கு நட­வ­டிக்கை  எடுத்­துள்ளேன்.  இதன் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு  நான்  தக­வலை  அனுப்­பி­யுள்ளேன். வடக்கு, கிழக்கில்  மீன­வர்கள்  பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். அதேபோல் இந்­திய மீனவர் பிரச்­சி­னையும் காணப்­ப­டு­கின்­றது. எனவே இவற்­றுக்கு எல்­லாம்­தீர்வு காணும் வகை­யி­லேயே தேசிய அமைச்சை  டக்ளஸ் தேவா­னந்­தா­வுக்கு வழங்­கி­யுள்ளேன்.

அபி­வி­ருத்தி மூலமே  இனங்­க­ளுக்­கி­டையே ஐக்­கி­யத்தை  ஏற்­ப­டுத்­தலாம். சமஷ்டி என்றும் அதி­கா­ரப்­ப­கிர்வு என்றும்  கூறிக்­கொண்டு  மக்களை அர­சியல் தலை­வர்கள்  ஏமாற்­றி­வந்­துள்­ளனர். பெரும்­பான்­மை­யின மக்கள் விரும்­பாத  எத­னையும் செய்ய முடி­யாது. அந்த மக்கள் எதிர்க்கும் விட­யங்­களை மேற்­கொள்ள முடி­யாது. சமஷ்டி என்றும் அதி­கா­ரப்­ப­கிர்வு என்றும் கூறி மக்­களை ஏமாற்­று­கின்­றனர்.  

அனை­வரும் ஒற்­று­மை­யாக வாழும் கெள­ர­வ­மான சூழல் வேண்டும் என்று  கோரு­கின்­றனர். தெற்கில்  சிங்­க­ளவர் ஒருவர் முருங்கை இலை விற்­கின்றார். தமிழர் ஒருவர் வியா­பாரம் செய்­கின்றார். இதில் கெள­ரவம் என்று எதனை கொள்­ள­மு­டியும். கெள­ர­வத்­துடன் வாழ்­வது என்றால் கல்வி, சுகா­தாரம், உட்­பட மக்­களின் தேவை­களை  நிறை­வேற்­றக்­கூ­டிய   வாழ்வு தேவை. அத­னையே  கெள­ர­வ­மாக வாழும் சூழல் என்று கூறலாம்.

அதி­கா­ரப்­ப­கிர்வு  குறித்து பேசி பய­னில்லை. அபி­வி­ருத்தி மூலமே இனங்­க­ளுக்­கி­டையே ஒற்­று­மை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த முடியும்.  சில தினங்­க­ளுக்கு முன்னர்  வடக்கு, கிழக்கை  சேர்ந்த   நான்கு ஆயர்­மார்­களை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில்  சந்தித்துப் பேசினேன். அவர்கள்  வடக்கு, கிழக்கில் தொழில் பயிற்சிகளை வழங்குமாறும் முதலீடுகளை  உருவாக்கி  தொழில் பேட்டைகளை உருவாக்குமாறும் வேலைவாய்ப்புக்களை வழங்குமாறும்  தொழில் பயிற்சிகளை வழங்கமாறுமே   கோரினர்.  

தமிழ் பிரதிநிதிகள்  இந்த விடயங்கள்  குறித்து உணர்ந்துகொள்ளவேண்டும்.  நேரடி அபிவிருத்தியின் ஊடாக இனங்களுக்கிடையே ஒற்றுமையை  ஏற்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை  நான்  மேற்கொள்வேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11