பிரதேசத்தின் தூய்மையைப்பேணுவோம் நோய்த்தாக்கத்திலிருந்து எம்மை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் கனடா உதயம் கலாச்சார சங்கத்தின் அனுசரணையுடன் இருபாலை தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் விழிப்புணர்வுக் கலந்துரையாடலும், களவிஜயமும் அண்மையில் இருபாலை தெற்கு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு.பா.பிரதீபம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடகிழக்கு பிரதேசசபை தவிசாளர் திரு.தி.நிரோஸ்,பிரதேச சபை உறுப்பினர்கள் திரு.நடேசபிள்ளை கஜேந்திரகுமார்,திருமதி.நகுலேஸ்வரி சரவணபவன், பொதுச்சுகாதார பரிசோதகர், கிராமசேவையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பிரதேச களவிஜயம் மேற்கொள்ளப்பட்டதுடன் பராமரிக்கப்படாது இருந்த வெற்றுக்காணிகளுக்கு துப்பரவு செய்வதற்கான முன்னறிவித்தல் பலகைகள் இடப்பட்டது.
மக்கள் வாழ்விடங்களில் காணப்பட்ட திண்மக்கழிவகற்றல் நடவடிக்கை பிரதேசசபையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM