(நா.தனுஜா)
தற்போது ஊடகநிறுவனங்கள் மீது பிரயோகிப்படும் அழுத்தங்களை விடவும் பொதுத்தேர்தலின் பின்னரே படுமோசமான நிலையொன்று உருவாகும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இன்று கொழும்பிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வாவும், எஸ்.எம். மரிக்காரும் மேற்கண்டவாறு கூறினர்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை நோக்குகையில், அவர்கள் விரும்பும் வகையிலேயே நாட்டின் சட்டம் வரையறுக்கப்பட்டிருப்பது போன்று தெரிகிறது.
இவ்வரசாங்கம் ஆட்சிபீடமேறிய பின்னர் சில நாட்களிலேயே ஊடகவியலாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்களின் மீதும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
நாட்டின் தேசியத்துவத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஊடகவியலாளர்கள் முறையாக செயற்பட்டால் தாமும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதாகவும் ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் கடந்த ஒருமாதகாலத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM