தீயணைப்பு படையினரின் துரித செயற்பாட்டால் தடுக்கப்பட்ட தீ பரவல் - வவுனியாவில் சம்பவம்

Published By: Digital Desk 4

16 Dec, 2019 | 07:40 PM
image

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினால் தீ பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை உக்கிளாங்குளத்தில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திராவின் வீட்டு சுவாமி அறையில் மின் ஒழுக்கு காரணமாக தீ பற்றியுள்ளது. 

இதனை அவதானித்தவர்கள் உடனடியாக செயற்பட்டதுடன் அயலவர்களுடன் தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனத்தினை மேற்கொண்டனர்.

இந் நிலையில் இலங்கை மின்சார சபையினர் மற்றும் வவுனியா நகரசபையின் தீயணைப்பு படையினர் துரிதமாக குறித்த பகுதிக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக தீ சுவாமியறையுடன் கட்டுப்படுத்தப்பட்டது. இதன்போது குறித்த அறையில் வைக்கப்பட்டிருந்த அலுமாரி மற்றும் சில பொருட்கள் எரிந்துள்ளது.

வவுனியாவில் இவ்வாறான தீவிபத்துக்கள் இடம்பெற்றால் 0242225555 என்னும் துரித இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுவதன் மூலம் இழப்புக்களை குறைத்துக்கொள்ளலாமென நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44