வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினால் தீ பரவல் தடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை உக்கிளாங்குளத்தில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திராவின் வீட்டு சுவாமி அறையில் மின் ஒழுக்கு காரணமாக தீ பற்றியுள்ளது.
இதனை அவதானித்தவர்கள் உடனடியாக செயற்பட்டதுடன் அயலவர்களுடன் தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனத்தினை மேற்கொண்டனர்.
இந் நிலையில் இலங்கை மின்சார சபையினர் மற்றும் வவுனியா நகரசபையின் தீயணைப்பு படையினர் துரிதமாக குறித்த பகுதிக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தீ சுவாமியறையுடன் கட்டுப்படுத்தப்பட்டது. இதன்போது குறித்த அறையில் வைக்கப்பட்டிருந்த அலுமாரி மற்றும் சில பொருட்கள் எரிந்துள்ளது.
வவுனியாவில் இவ்வாறான தீவிபத்துக்கள் இடம்பெற்றால் 0242225555 என்னும் துரித இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுவதன் மூலம் இழப்புக்களை குறைத்துக்கொள்ளலாமென நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM