வவுனியா தாலிக்குளம் பகுதியில் அண்மையில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவருடன் சம்பவம் இடம்பெறும் இடத்திற்கு சென்ற இருவரை பூவரசன்குளம் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து அச் சந்தேக நபர்கள் இருவரையும் 10நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
தாலிக்குளம் 8ஆம் ஒழுங்கையிலுள்ள 15வயது சிறுமி ஒருவர் வழமையாக தனது உறவினரின் வீடு ஒன்றிற்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். சம்பவ தினத்தன்று 10ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் தனது கற்றல் செயற்பாடுகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சிறுமியை அப்பகுதியிலுள்ள இளைஞன் சிறுமியை அருகிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவருடன் சென்ற இருவர் அவருக்கு பாதுகாப்பிற்காக வெளியே நின்றுள்ளனர். மறு நாள் குறித்த சம்பவத்தை பாதுகாப்பிற்கு நின்றவர்கள் என்று கருதப்படுபவர்களில் ஒருவர் கிராமத்திலுள்ள சிலருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமியை பொலிசார் அழைத்து விசாரணை மேற்கொண்டதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ அறிக்கையினையும் பெற்றுக்கொண்டனர். இச்சம்பவத்தினுடன் தொடர்புபட்ட 26 வயதுடைய பிரதான நபர் தலைமறைவாகியுள்ளது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
குறித்த நபர் ஏற்கனவே கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதுடன் தாலிக்குளம் பகுதியில் பெண்கள் மீது சில்மிசங்களையும் கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளார்,
என்றும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி இவ்வாறு நேரடியாக தொடர்புபட்டுள்ள பிரதான சந்தேக நபரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை பொலிசார் மேற்கொள்ளவேண்டும் என்று அக்கிராமத்திலுள்ளவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM