வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆராய விசேட குழு - அமைச்சர் டக்ளஸ் தீர்மானம்

Published By: Digital Desk 3

16 Dec, 2019 | 03:21 PM
image

பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள வட கடல் (நோர்த் சீ) நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைக்கவிருப்பதாக கற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வட கடல் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் கடற்றொழில் நீரக வள மூலங்கள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (16.12.2019) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பாரிய நஷ்டத்தில் இயங்கி வருகின்ற வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தனக்கு கிடைக்கும் தகவல்கள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட கடல் நிறுவனமும் ஊழியர்களின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் சுட்டிக் காட்டினார்.

மேலும், குறித்த நிறுவனம் பாரிய நஷ்டத்தில் இயங்குவதற்கும் உற்பத்தி செயற்பாடுகள் வீழ்ச்சியடைவதற்குமான காரணங்களை அறிந்து கொள்வதற்காக விசேட விசாரணைக் குழுவை நியமிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, தற்போது வட கடல் நிறுவனத்திடம் இருக்கின்ற வளங்களை பயன்டுத்தி மேற்கொள்ளக் கூடிய அதிகபட்ச செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையினை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46