மலை­யக பல்­க­லைக்­க­ழ­க­ம் : கட்சி பேதங்­களை கடந்த செயற்­பா­டாக இருத்தல் அவ­சியம்

16 Dec, 2019 | 03:04 PM
image

மலை­யக சமூ­கத்தை பிர­தி­நி­தித்­துவப்படுத்தும் வகையில் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு பலர் மத்­தியில் எதிர்ப்­புக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் , அதனை உரு­வாக்­கு­வதே மலை­யக மக்கள் மற்றும் மலை­யக அமைப்­பு­களின் பெரும் எதிர்­பார்ப்­பாகும். அதனை நிறை­வேற்றும் வகை­யி­லான முதல் அடித்­தளம் தற்­போது இடப்­பட்­டுள்­ளது.

இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸினால் முன்­வைக்­கப்­பட்ட 32 கோரிக்­கைகளுள் ஒரு அம்­ச­மான இந்த பல்­க­லைக்­க­ழ­கத்தை  உரு­வாக்­கு­வது  தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவும் இணக்கம் தெ­ரி­வித்­துள்ளார். இதனை செயற்­ப­டுத்தும் எண்­ணத்தில் அமைச்சர் ஆறு­மு­கனின்   பரிந்­து­ரையின் பேரில்  முன்னாள் அமைச்சர் பி.பி. தேவ­ராஜின் தலை­மையில் உப­குழு அமைக்­கப்­பட்டு அதற்­கான செயற்­திட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் இந்த விடயம் தொடர்­பான முதல் கலந்­து­ரை­யாடல் கொழும்பு தமிழ்ச் சங்­கத்தில் கடந்த 5 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றது.

இதன்­போது மலை­யக கல்­வி­மான்கள் , பேரா­சி­ரி­யர்கள் , அர­சி­யல்­வா­திகள் , தொழி­ல­தி­பர்கள் , நலன் விரும்­பிகள் உள்­ளிட்ட பலரும் கலந்து கொண்ட­துடன், மலை­ய­கத்­துக்­கான பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் மூன்று சுற்­றுக்­களில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. சிறப்­பான முறையில் இடம்­பெற்­றி­ருந்த இந்த கலந்­து­ரை­யா­டலில் ஏன் மலை­ய­கத்­துக்­கென்று பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட வேண்டும், அதன் அமைப்பு எவ்­வாறிருக்க வேண்டும் என்­பது தொடர்பில் கல்­வி­மான்களின்  கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­ட­துடன் , திறந்த சுற்றில் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கான அவ­சியம் தொடர்பில் சபை­யி­லி­ருந்த பலரும் தமது கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜ்

  மலை­ய­கத்­துக்­கான பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைப்­ப­தற்­கான  வழி­பி­றந்­துள்­ளது. அதனை நாம் நன்கு பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். கட்­சி­பேதம் இன்றி நாம் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டாலே இதில் வெற்­றி­காண முடியும்.

அமைச்சர் ஆறு­முகன்   என்னை அழைத்து இந்த விடயம் தொடர்பில் உங்­களால் ஆராய்ந்து பார்க்க முடி­யுமா என்று கேட்­ட­போது , நான் மிக மகிழ்ச்­சி­யுடன் அதனை ஏற்­றுக்­கொண்டேன். அதற்­க­மைய இந்த விடயம் தொடர்பில் முதற்­கட்ட கலந்­து­ரை­யாடல் ஒன்றை  மேற்­கொள்ள நாம் தீர்­மா­னித்தோம். இந்த கலந்­து­ரை­யா­டலை கல்வி அமைச்சில் மேற்­கொள்­வது உசி­த­மா­னது அல்ல என்­ப­தினால், தமிழ்ச்­சங்கம் போன்ற ஒரு மண்­ட­பத்தில் மேற்­கொள்­வது சிறந்­தது என்று கரு­தியே இதனை இங்கு ஒழுங்கு செய்­துள்ளோம்.

மலை­யக சமூ­கத்தைச் சேர்ந்த சிறந்த கல்­வி­மான்கள் இருக்­கின்­றனர். இவர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி இதற்­கான முடி­வு­களை எடுப்­பது சிறந்­தது என்று நான் கரு­து­கின்றேன். பிரித்­தா­னி­யரின் ஆட்சி காலங்­களின் போது, 1902 ஆம் ஆண்டு பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் பெருந்­தோட்ட பிள்­ளை­க­ளுக்கு ஏன் கல்வி கற்­பிக்­கப்­ப­டு­வ­தில்லை என்று கேள்வி எழுப்­பப்­பட்ட போது , தோட்ட நிர்­வாக சங்­கத்­த­லை­வர்கள் 'கல்வி போதிக்­கப்­ப­டா­விட்டால்    அப்­ப­டி­யொரு பாதிப்பும் ஏற்­ப­ட­போ­வ­தில்லை, மாறாக கற்­பிக்­கப்­பட்டால் வீண் விப­ரீ­தங்­களே ஏற்­படும்" என்றும் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இவ்­வாறு கல்­வியில் புறக்­க­ணிக்­கப்­பட்டு வந்த எமக்கு சுதந்­தி­ரத்தின் பின்­ன­ரான, 1977 ஆம் ஆண்டின் பின்­னரே அதில் மாற்றம் ஏற்­பட தொடங்­கின. இந்­நி­லையில் நாம் தற்­போது கல்­வியில் உயர் நிலையை  நோக்கி நகர்ந்து வந்து கொண்­டி­ருக்­கின்றோம். இவ்­வா­றான சூழ்­நி­லை­யிலே மலை­ய­கத்­துக்­கென்று பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­ப­டு­வது உசி­த­மா­னது என நான் எண்­ணு­கின்றேன்.

பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரம்

 மலை­யக பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் கடந்த 12 வரு­ட­கா­ல­மாக நானும் , பேரா­சி­ரியர் மூக்­கையா மற்றும் பேரா­சி­ரியர் தனராஜ் உள்­ளிட்ட பலரும் எழுதி வரு­கின்றோம்.  இந்த விடயம் தொடர்பில் அமரர்  சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மா­னிடம் நாங்கள் தெரி­வித்த போது அவ­ரது வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க அறிக்­கை­யொன்­றையும் தயா­ரித்துக் கொடுத்­தி­ருந்தோம்.   பின்னர் பல தட­வைகள் குழு அமைத்தும் இந்த பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினோம்.  

1942 ஆம் ஆண்டே இலங்­கைக்­கான முதல் பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால் இதற்­கான யோச­னைகள் 1890 ஆம் ஆண்டே ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­டன. ஆங்­கி­லேயர் காலத்­திலே இலங்­கையில் பல்­க­லைக்­க­ழ­க­மொன்றை அமைக்க தீர்­மா­னித்­த ­போது எவ்­வா­றான தடங்­கல்கள் ஏற்­பட்­டதோ அதே­போ­லதான் இப்­போது மலை­யகப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கும் எதிர்ப்­புகள் தோற்றம் பெற்று வரு­கின்­றன.

  சுமார் 15 இலட்சம் மக்­களை கொண்­டுள்ள மலை­ய­கத்தின் அடை­யா­ளத்தை பிர­தி­ப­லிக்க ஒரு தேசிய பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­பட வேண்டும்.இது­வரை காலமும் தனக்­கென்ற பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் சிந்­திக்­காத மக்கள் 20 ஆம் நூற்­றாண்டின் பிற்­ப­கு­தியில் சிந்­திக்க ஆரம்­பித்­துள்­ளார்கள் என்றால், அவர்கள் வளர்ச்­சி­ய­டைந்து விட்­டார்கள் என்­ப­தையே உணர்த்­து­கின்­றது.  நாங்கள் ஒரு இனத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தற்­காக இந்த யோச­னையை முன்­வைக்­க­வில்லை.   ஒவ்­வொரு பகு­தி­க­ளிலும் அவர்­களின் அடை­யா­ளத்தை பிர­தி­ப­லிக்கும் வகையில் பல்­க­லைக்­க­ழ­கங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. வவு­னி­யா­விலும் பல்­க­லைக்­க­ழ­க­மொன்று  அமைக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் எம்­மக்­களின் வர­லாறு கலா­சார பண்­புகள் ஆரா­யப்­பட , அவர்­களின் அடை­யா­ளத்­தையும் மேம்­ப­டுத்த வேண்டும் அல்­லவா?  ஏனைய பல்­க­லைக்­க­ழ­கங்­களில் எமது பண்­புகள் தொடர்பில் கற்கை நெறி­களை மேற்­கொள்ள முடி­யாது.

ஜனா­தி­பதி நினைத்தால் ஒரு நிமி­டத்தில் பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைக்க முடியும். ஆனால் நடை­முறை சாத்­தி­ய­மற்ற விட­யங்­களே மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. பல்­க­லைக்­க­ழகம் அமைப்­பது தொடர்பில் குழுக்கள் அமைத்து ஆராய்ந்து இறு­தியில் அது தேவை­யில்லை என்ற நிலைமை ஏற்­ப­டவும் வாய்ப்­பி­ருக்­கின்­றது.

இறு­தி­யாக எம் நாட்டில் 2005 ஆம் ஆண்டே பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் இந்த 14 வருட கால­மாக இன்னும் ஒரு பல்­க­லைக்­க­ழகம் கூட உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. எமது வேண்­டுகோள் என்­ன­வென்றால், அடுத்த பல்­க­லைக்­க­ழ­கத்தை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் அமை­யுங்கள் என்­பதே. ஆராய்ச்­சி­களின் ஊடா­கவே சமூ­கத்தின் மேம்­பாட்டை ஏற்­ப­டுத்த முடியும். நாமும் எமது சமூ­கத்தில் மேம்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தென்றால் ஆய்­வு­களை மேற்­கொள்ள வேண்டும். அதற்­கா­கவே  எமக்­கென்று ஒரு பல்­க­லைக்­க­ழகம் தேவைப்­ப­டு­கின்­றது.

பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலே கற்­பித்தல் மற்றும் ஆராய்ச்­சி­களே மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. எமது சமூகம் தொடர்­பிலும் நாம் அவற்றை  மேற்­கொள்ள வேண்டும். .அதேவேளை இவ்­வாறு பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட்டால் உயர்­கல்­விக்­கான கேள்­வியும் எமது சமூ­கத்தில் அதி­க­ரிக்கும்.  அப்­போது அனை­வரும் உயர்­கல்­வியை பெறு­வ­தற்­கான சந்­தர்ப்பம் ஏற்­படும். எந்த பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் பட்­ட­ப­டிப்பை மேற்­கொள்­ளலாம். ஆனால் மலை­ய­க ­மக்­களை அடை­யா­ளப்­ப­டுத்தும் வகை­யி­லான கற்­கை­நெ­றி­களை முன்­னெ­டுக்­கவே இந்த மலை­யத்­திற்கு ஒரு பல்­க­லைக்­க­ழகம் தேவை­யா­க­வுள்­ளது.

பேரா­சி­ரியர் எம்.எஸ்.மூக்­கையா  

பல்­க­லைக்­க­ழகம் என்றால் பாட­சாலை கல்­வியை முழு­மை­யாக முடித்த மாண­வர்­க­ளுக்­கான உயர் கல்­வியை வழங்கி அதற்­கான ஒரு அங்­கீ­கா­ரத்தை வழங்கும் வகையில் பட்­ட­மொன்றை வழங்கும் இடம் என்­று தான் நாம் நினைத்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.இவை காலத்­திற்கு காலம் அவற்றின் நடை­மு­றைகள், இயக்­கங்கள் என்­பவற்றை பொறுத்து வளர்ச்­சி­ய­டைந்து வரு­கின்­றன.

'யுனி வர்­சிட்டி" என்­பது ஐரோப்­பிய ஜேர்­ம­னிய சிந்­தனை. தலை­மைத்­து­வ­தற்­திற்­கான பயற்­சி­களை மாத்­திரம் வழங்கும் இட­மா­கவே இவை காணப்­பட்­டன. இதன்­போது தன­வந்­தர்கள் மற்றும் உயர்­மட்­டத்தில் உள்­ள­வர்­களின் பிள்­ளைகள் மாத்­தி­ரமே இதன் மூலம் கல்வி கற்று வந்­தனர்.ஆனால் இங்கு ஏற்­பட்ட புரட்­சி­களின் பின்னர் ஏனைய சமூ­கத்­தி­னரும் கற்­ப­தற்­கான வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

வளர்ச்­சி­ய­டைந்த நாடு­களில் பல்­க­லைக்­க­ழகம் என்­பது தனி­யான சமூ­கத்­தி­ன­ருக்கு என்று வேறுப்­ப­டுத்­த­ப­டாமல் , அனைத்து சமூ­கத்­தி­ன­ரையும் இணைத்துக் கொண்டு செயற்­படும் உயர்­மட்­டத்­தி­லான கல்வி நிறு­வ­னங்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றது. இந்­நாட்டை பொறுத்­த­மட்டில் ஒரு இலட்­சத்து 25 ஆயிரம் மாண­வர்கள் உயர்­த­ரத்தில் தோற்றி சித்­தி­ய­டைந்­தி­ருந்­தாலும் கூட இதில் 30 ஆயிரம் பேருக்கு மாத்­தி­ரமே பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கான அனு­மதி கிடைக்­கின்­றது.ஏனைய 90 ஆயிரம் பேரில் வச­தி­ப­டைத்த பகு­தி­யி­னரைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மாண­வர்கள் வெளி­நா­டு­களில் சென்று பட்டப் படிப்பை முடித்­தாலும் , மீத­முள்ள 80 ஆயிரம் மாண­வர்கள் விரக்­தி­யி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர். இவ்­வா­றான நிலை­யிலே 15 பல்­க­லைக்­க­ழ­கங்­களை வைத்­துக்­கொண்டு எம்மால் எந்த மாற்­றத்தை ஏற்­ப­டுத்­த­மு­டியும்?

பல்­க­லைக்­க­ழ­கங்­களை வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களை உரு­வாக்கி நாட்­டிற்கு பெரும் சுவையை ஏற்­ப­டுத்தும் நிறு­வ­னங்­க­ளாக பார்ப்­பதை நிறுத்திக் கொள்­ள­வேண்டும்.பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கான அனு­ம­தியை பெறு­ப­வர்­களின் தொகை­யிலும் தற்­போது அதி­க­ரிப்பு ஏற்­பட்டு வரு­கின்­றது. இந்­நி­லையில் உயர்­கல்­வியை பெறு­ப­வர்­களே அவர்­களின் வாழ்க்­கைத்­த­ரத்­தையும் உயர்த்திக் கொள்­ள­வேண்டும். தகுதி வாய்ந்­த­வர்கள் மட்­டும்தான் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்க முடியும் என்ற நிலை­மையை மாற்றி சாதா­ரண எழுத படிக்க தெரிந்­த­வர்கள் கூட பயிற்­சி­களை பெற்று சான்­றி­தழ்­களை பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை­மை­களை நாங்கள் ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளளோம்.

பேரா­சி­ரியர் தை. தனராஜ்

 நாம் முதலில் மலை­யகப் பல்­க­லைக்­க­ழகம் என்று கூறு­வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.மலை­யகம் என்­பது தனி­யான ஒரு சமூ­கத்தை பிர­தி­ப­லிப்­ப­தாகும். இது தனி­யான ஒரு சமூ­கத்­திற்கு முன்­னு­ரிமை கொடுப்­ப­தாக பல­ராலும் அவ­தா­னிக்­கப்­ப­டு­கின்­றது.இந்த விடயம் தொடர்பில் நாங்கள் பேச்­சு­வார்த்தை  நடத்­திய போதும். ஒரு சமூ­கத்­திற்­கென்று ஏன் பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­பட வேண்டும் என்ற கேள்வி எழுப்­பப்­பட்­டது. இலங்­கை­யி­லுள்ள அனைத்து பல்­க­லைக்­க­ழ­கங்­களும் தமது கலா­சார அம்­சங்­களை வெளிப்­ப­டுத்­தி­னாலும், அவை அனைத்தும் தேசிய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளா­கவே திகழ்­கின்­றன. இந்­நி­லையில் எல்லா பிர­தே­சங்­க­ளையும் சேர்ந்த மாண­வர்கள் அங்கு கல்வி கற்று வரு­கின்­றனர்.

எம்மைப் பொறுத்­த­வ­ரையில் அடுத்து உரு­வா­க­வி­ருக்கும் பல்­க­லைக்­க­ழ­கத்தை மலை­நாட்டில் அமைப்­பதே சிறந்­தது. இந்­நி­லையில் 16 ஆவது பல்­க­லைக்­க­ழ­கத்தை அட்டன் , கொட்­ட­கலை அல்­லது தல­வாக்­க­லையில் அமைப்­பது சாலச் சிறந்­தது எனக் கரு­து­கின்றேன். அப்­போது பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதி­ரான தவ­றான அபிப்­பி­ரா­யங்­களை தவிர்த்துக் கொள்­ளலாம்.

பல்­க­லைக்­க­ழ­கத்தின் பழை­மை­யான கற்கை நெறி­க­ளாக சான்­றிதழ், டிப்­ளோமா, பட்­ட­தாரி , முது­கலை என்­ப­னவே அமை­யப்­பெற்­றுள்­ளன. நாம் தொடர்ந்தும் இந்த கற்கை நெறிகள் தொடர்­பிலே ஆரா­யாமல், வெளிப்­புற திட்­டங்­களை ஆரம்­பிப்­பதே சிறந்­தது. இத­னூ­டாக நாம் முன்­னேற்­ற­க­ர­மான வளர்ச்­சியை அடை­ய­மு­டியும். மாற்றம் என்­பது மனித குலத்­திற்கு புதி­ய­வி­ட­ய­மல்ல, நாம் தற்­போது எமக்­கென்று ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்க முன்­வந்­துள்ளோம். இது சாத்­தி­யப்­ப­டு­மானால் அது எமக்கு பெரும் மகிழ்ச்­சியே.

இலங்­கையில் விரி­வு­ரை­யா­ளர்கள் 5000 பேர் இருக்­கின்­றார்கள். அவர்­களுள் 21 விரி­வு­ரை­யா­ளர்­களே மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்கள். 500 பேரா­சி­ரி­யர்­களில் 5 பேரே மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள், அவர்­களும் தற்­போது ஓய்­வு­பெற்­று­விட்­டார்கள். இந்­நி­லையில் தற்­போது பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் விஜ­ய­சந்­தி­ர­னுக்கு அந்த வாய்ப்பு கிட்­டி­யுள்­ளது. இவ்­வா­றான நிலை­யிலே நாம் ஏனைய சமூ­கத்­தை­விட பின்­ன­டை­விலே இருக்­கின்றோம். இதனால் எமக்கு பல்­க­லைக்­க­ழகம் தேவை­யில்லை என்­ப­தில்லை. நாம் இந்த நிலை­யி­லி­ருந்து மாற்­ற­ம­டைய வேண்­டு­மென்றால் அதற்­கான புதிய ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்டும்.

கலா­நிதி ஏ.எஸ்.சந்­தி­ரபோஸ்

பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்­கு­வது தொடர்பில் 4 விட­யங்­களை முன்­வைக்க விரும்­பு­கின்றேன். முத­லா­வ­தாக எண்­ணக்­கரு அறிக்­கை­யொன்றை தயா­ரிக்க வேண்டும். கடந்த 15 வரு­டங்­க­ளாக பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் பேசியும் எழு­தியும் வரு­கின்­றார்­களே தவிர இந்த அறிக்கை இன்னும் தயா­ரிக்­கப்­ப­ட­வில்­லையா என்று நீங்கள் நினைக்­கலாம். கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­ன­தாக நாங்கள் அடிக்­கடி கூடி முன்னாள் அமைச்சர் மனோ கணே­சனின் தலை­மையில் திட்­ட­வட்­ட­மான அறிக்­கை­யொன்றை தயா­ரித்­துள்ளோம்.

ஏறக்­கு­றைய 15 பக்­கங்­க­ளுக்கும் அதி­க­மான பக்­கங்­களை கொண்டு இந்த அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இதில் பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைப்­ப­தற்­கான காரணம் , அதன் கட்­ட­மைப்பு எவ்­வாறு அமை­ய­வேண்டும் , அதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள பாடத்­திட்­டங்கள் என்­பன பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த அறிக்கை தற்­போது முன்னாள் அமைச்சர் மனோ கணே­ச­னி­டமே இருக்­கின்­றது, இதனை மீளப் பெற­மு­டி­யுமா?அல்­லது பிறி­தொரு அறிக்­கையை தயா­ரிப்­பதா? என்­பது தொடர்பில் முன்னாள் அமச்சர் பி.பி தேவ­ராஜூம்  அமைச்சர் ஆறு­மு­கனும்    தீர்­மா­னிக்க வேண்டும்.

இரண்­டா­வ­தாக அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்றை தாக்கல் செய்து , பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்க அமைச்­ச­ரவை அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். மூன்­றா­வ­தாக பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைப்­ப­தற்­கான நிலம் தொடர்பில் அவ­தானம் செலுத்த வேண்டும். மலை­நாட்டு பகு­தி­யிலே 35 ஆயிரம் ஹெக்­டெயர் காணிகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. ஹட்டன் - நுவரெலியா வீதிகளில் அவை காணப்படுகின்றன. இவ்வாறான நிலங்களை எமக்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும்.எனவே நிலத்தை அடையாளம் காணுவதில் எமக்கு சிக்கல் ஏற்படாது என்று நான் எண்ணுகின்றேன்.

நான்காவது விடயமாக நிதி திரட்டுவது தொடர்பில் ஆராயப்பட வேண்டும். அரசாங்கம் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி உடனே பல்கலைக்கழகத்தை நிராகரிக்கலாம். இவ்வாறான நிலையிலே எமக்கான நிதியை திரட்டுவது தொடர்பில் நாம் வெளிநாடுகளிலும் , எம் அயல் நாடான இந்தியாவிடமும் உதவிகளை பெற்றுக் கொள்ளமுடியும்.

இந்த கலந்துரையாடலின் போது , இரண்டாவது சுற்றிலே பல்கலைக்கழகம் செல்லும் போது மலையக மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் , பல்கலைக்கழத்தின் அவசியம் , இதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் , இனிமேல் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் , கலாநிதி சந்திரமோகன் , யசோதரா கதிர்காம  தம்பி , பேராசிரியர் எஸ். விஜேயசந்திரன் , கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி பிரேம்குமார்,  கலாநிதி இரா.ரமேஸ் , இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி பிரபாகரன்  ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

நிகழ்வுகளின் இறுதியில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பி.பி தேவராஜ் , இந்த கலந்துரையாடலின் பின்னர் மலையக பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புகளும் கிடைக்கப்பெறும் என்று தனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் , இதன்போது முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்கள் மற்றும் ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டு அமைச்சரவை பத்திரமொன்றை தயாரித்து, அதனை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.  

 

- செ.தேன்மொழி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04