இனவாதத்தை தமக்குள் ஏற்படுத்தும் நிலைமையை சிறுபான்மை மக்கள் தவிர்ப்பது மிக அவசியமானது

Published By: Digital Desk 3

16 Dec, 2019 | 02:57 PM
image

நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அடிப்படைவாத அரசியல் தார்ப்பரியங்களை புரிந்துகொள்ளாமல் சிறுபான்மை சமூகங்கள் தமக்குள் இனவாதத்தைத் தூண்டும் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்வது ஆரோக்கியமான நடைமுறையல்ல, தற்போது கிழக்கில் இத்தகையதொரு கொதிநிலை காணப்படுகின்றது. இதன் பின்புலம் குறித்து சிறுபான்மை சமூகங்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருமான நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

தமிழ், முஸ்லிம் மக்கள் காலம் காலமாகக் கிழக்கில் மிக அன்னியோன்னியமாக ஒருதாய் பிள்ளைகள் போன்று வாழ்ந்து வந்தனர், வருகின்றனர். இந்நிலையில் இதனை குழப்பி அடித்து அவர்களுக்கு மத்தியில் வேற்றுமைகளை உருவாக்கி அதன் மூலமாக அரசியல் பிரிவினைகளை ஏற்படுத்தி தத்தமது சுயலாபங்களுக்கான வழிமுறைகளை திறக்க சிலர் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றனர். குறிப்பாக இவர்கள் தற்போதைய அரசுக்கு ஆதரவளிப்பவர்களாக இருப்பதும் வெள்ளிடைமலை.

இந்த நிலைமையானது சிறுபான்மை சமூகங்களில் இருப்புக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பது போல் பேரினவாதச் சக்திகளும் இதற்குத் தூப மிட்டு வருகின்றன. எனவே இத்தகைய சக்திகளின் சிந்தனைகளுக்கு நாம் உயிரூட்டாமல் எமது ஒற்றுமையை வலுப்படுத்த திடசங்கற்பம் கொள்ளவேண்டும்.

பிரித்தாளுதல் என்பது அரசியல் சாதுரியத்தின் உச்சகட்ட வழிநிலையாகும். இதனைக் கைக்கொள்வதில் பேரினவாதிகள் சமார்த்தியசாலிகளாக இருக்கின்றனர். அவர்களது இந்த அணுகுமுறைதான் நாட்டில் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வழிவகுத்தன. இதுவே இன்று சிறுபான்மை சமூகங்களுக்கு பெரும் பின்னடைவுகள் ஏற்படக் காரணமாகவும் உள்ளன.

இவற்றையெல்லாம் சரிவர புரிந்து கொள்ளாத அரசியல் தலைமைகள் சிலர் இவற்றுக்கு தற்போதும் துணைபோகத் தலைப்படுகின்றன. இது காத்திரமான நடைமுறையல்ல எனவே சிறுபான்மை சமூகங்கள் தமது ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் வளர்த்துக் கொண்டு சமாதானத்தை மேம்படுத்த முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்பும் அதேவேளை, தொடர்ந்தும் பிரித்தாளும் ஏற்பாடுகளுக்கு துணை போகாதீர் என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன்  என்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48