வவுனியா பூந்தோட்டம் , சிறிநகர், பெரியார்குளம் கிராமங்களை உள்ளடக்கியதான மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கிராமங்களின் இளைஞர்கள்,பெண்கள், பொது அமைப்புகள், சுகாதாரபிரிவினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்த குறித்த செயற்திட்டம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகி மழையினையும் பொருட்படுத்தாமல் மாலை5 மணிவரையும் தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தது.
இதன்போது பல்வேறு குழுக்களாக பிரிந்த இளைஞர்கள் மூன்று கிராமங்களையும் உள்ளடக்கிய அனைத்து வீடுகளுக்கும் சென்று டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருந்தவர்களிற்கு அறிவுரைகளை வழங்கியிருந்ததுடன், போத்தல்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இளநீர் கூடுகள் போன்றவற்றையும் அகற்றியிருந்தனர்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமையை கருத்தில் கொண்டே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த பணியில் இளைஞர்கள், மேற்பார்வை சுகாதார பரிசோதகர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பெண்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM