வவுனியாவில் மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Published By: Digital Desk 4

16 Dec, 2019 | 10:35 AM
image

வவுனியா பூந்தோட்டம் , சிறிநகர், பெரியார்குளம் கிராமங்களை உள்ளடக்கியதான மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கிராமங்களின் இளைஞர்கள்,பெண்கள், பொது அமைப்புகள், சுகாதாரபிரிவினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்த குறித்த செயற்திட்டம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகி மழையினையும் பொருட்படுத்தாமல் மாலை5 மணிவரையும் தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தது. 

இதன்போது பல்வேறு குழுக்களாக பிரிந்த இளைஞர்கள் மூன்று கிராமங்களையும் உள்ளடக்கிய அனைத்து வீடுகளுக்கும் சென்று டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருந்தவர்களிற்கு அறிவுரைகளை வழங்கியிருந்ததுடன், போத்தல்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இளநீர் கூடுகள் போன்றவற்றையும் அகற்றியிருந்தனர்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும்  மழையுடனான காலநிலையை தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமையை கருத்தில் கொண்டே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த பணியில் இளைஞர்கள், மேற்பார்வை  சுகாதார பரிசோதகர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பெண்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58