மட்டு போதனா வைத்தியசாலையில் அதிகளிவல் மருந்து ஏற்றியதில் 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 வது சந்தேகநபரான பெண்தாதி. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவருக்கு அதிக மருந்தை வழங்கியதால் சிறுமி உயிரிழந்த சம்வம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபரான பெண்; தாதியரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் எச்சரிக்கையுடன் விடுவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் புற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய உவைஸ் பாத்திமா ஜப்றா என்ற சிறுமிக்கு அதிகரித்த மருந்தை வழங்கியதால் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட பெண்தாதியர். மருந்தாளர் மற்றும் நீதிமன்றில் தெரிவான வைத்தியர் உட்பட மூவரையும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் எச்சரிக்கையுடன் நீதவான் விடுவித்தார்
இந்த நிலையில் குறித்த வைத்தியசாலையில் புற்றுநோய் வெளிநோயாளர் பிரிவின் தாதியருக்கு பொறுப்பாக இருந்த தாதியரை வெள்ளிக்கிழமை பொலிசார் கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் எச்சரிக்கையுடன் விடுவித்து எதிர்வரும் ஜனவரி 8 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM