வவுனியா நகரசபை மற்றும் பொதுநூலகத்தின் தேசியவாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று நடைபெற்றது.
வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாலை அணிவிக்கப்பட்டு விருந்தினர்கள் பவனியாக அழைத்துவரபட்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன், நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.
நிகழ்வில் தேசிய வாசிப்பு மாத சிறப்பிதழ் ஒன்றும் தவிசாளரால் வெளியீடு செய்து வைக்கப்பட்ட துடன் அதன் முதல் பிரதியை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் றஞ்சன் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பொதுநூலகத்தால் நடத்தப்பட்ட வாசிப்பு மாத போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளால், பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப் பட்டது.
நிகழ்வில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் காஞ்சன, உபநகரபிதா சு.குமாரசாமி, நகரசபை செயலாளர் இ. தயாபரன், வர்த்தகசங்க தலைவர் சுஜன் சண்முகராஜா, நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம், பா.பிரசன்னா,சு.காண்டீபன்,ஜெயவதனி, புஞ்சிகுமாரி, சமந்தா, நூலகர் பா.உருச்சந்திரன், பாடசாலை, மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM