தென்மேற்கு பாகிஸ்தானில் நேற்று வெள்ளிக்கிழமை பயணிகள் பஸ் ஒன்று வேன் மீது மோதியதில் இரு வாகனங்களும் தீப்பிடித்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் தோர காசி கான் மாவட்டத்தில் இருந்து பலூசிஸ்தானின் குவெட்டா நகருக்கு பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.
இந்த பஸ் பலூசிஸ்தானில் உள்ள கான் மெப்தார்சாய் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்திசையில் வந்த வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியது. இதில் 2 வாகனங்களிலும் தீப்பிடித்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைவதற்குள் 2 வாகனங்களும் முற்றிலும் எரிந்தன. இந்த கோரவிபத்தில் 15 பேர் உடல் கருகி பலியாகினர்.
மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய வேனில் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தி வரப்பட்டதும், அதனாலேயே 2 வாகனங்களிலும் தீப்பிடித்தும் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM