ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது எந்த முடிவும் மேற்கொள்ளாமலிருக்கும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.
அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய, 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த பதினைந்து மாதங்களாக எந்த முடிவும் மேற்கொள்ளாமல் அரசியல் சாசன விதிகளை மீறி செயற்பட்டுள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
முதலமைச்சர் நியமனம் தவிர்த்து பிற விவகாரங்களில் ஆளுநர் சுதந்திரமாக செயற்பட முடியாது என அரசியல் சாசனத்தின் 356 (1)பிரிவு கூறியுள்ளது.
பா.ஜ.க. உறுப்பினராகவும், ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இருந்த ஆளுநர் பன்வாலால் புரோஹித் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் கடந்த 15 மாதங்களாக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் மேற்கொள்ளாமல் இருக்கிறார்.
அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரின் செயற்பாடு நகைப்புக்குரியதாக இருக்கிறது. இவை அரசியல் சாசன முடக்கத்திற்கு சமமாகும் என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட்டு, ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளார்.
விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM